கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 10 ஆகஸ்ட், 2011

பத்துப்பாட்டு

சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ்
நூல்களுள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை,பதினெண்
கீழ்க்கணக்கு என்பன அடங்குகின்றன.இவற்றுள் திரு
முருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை,சிறுபாணாற்
றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு,
மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு,
பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்துநூல்கள்
அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகி
றது.இவையனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக்
குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று
தொடர்பற்றவை, வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு
கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு
எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில்
எழுந்ததென்பதே பலரது கருத்து.இத் தொகுதியிலுள்ள
நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை.
இவற்றில்பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு
பற்றிய பலஅரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன.
வரலாற்றுச் சம்பவங்கள்,அரசர்களினதும் வள்ளல்களின
தும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, அக்
காலக் கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை
பற்றியவருணனைகள் போன்றவை தொடர்பான பல
தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது.இத்
தொகுப்பிலுள்ள பத்து நூல்களும் நீண்ட அகவற்பாக்களா
ல் ஆனவை.இவற்றுள் 103அடிகளைக் கொண்டமைந்த
முல்லைப் பாட்டுக்கும்,782அடிகளையுடைய மதுரைக்
காஞ்சிக்கும்இடைப்பட்ட நீளங்களைக் கொண்டவையாக
ஏனையநூல்கள் அமைந்துள்ளன.சுவடிகளில் எழுதப்
பட்டுப்பயன்படுத்தப்பட்டுவந்த இந்நூல்கள் பிற்காலத்தில்
அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச்
சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில்,
டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1889 ஆம் ஆண்டு
முதன்முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார் இதன் பின்னர்
வேறும் பலர் முழுத்தொகுதியாகவும் இதில் உள்ள நூல்
களிற் சிலவற்றைத் தனித்தனியாகவும் புதிய உரைகளு
டன் வெளியிட்டுள்ளனர்.

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;