(1-ஆ)
மெய் எழுத்துக்கள்
தமிழ் மொழிக்கு உடல் போல் விளங்கும்
எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் ஆகும்
அத்துடன் இவை புள்ளி அல்லது ஒற்று
பெற்றிருப்பதால் இவை புள்ளி எழுத்துக்கள்
அல்லது ஒற்று எழுத்துக்கள் எனப்படும்
அவையாவன-
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
(1-ஆ-1)
மெய் எழுத்து வகைகள்
இவை மூன்று வகைப்படும்
அவையாவன -
(1)வல்லினம்
(2)மெல்லினம்
(3)இடையினம்
(1-ஆ- 1-1)
வல்லினம்
வன்மையாக ஒலிக்கும் மெய்எழுத்துக்கள்
வல்லினம் எனப்படும் .
அவையாவன-
க் ச் ட் த் ப் ற் என்ற ஆறு எழுத்துக்களும்
வல்லின எழுத்துக்கள் ஆகும்
உதாரணம்
(1)சுக்கு
(2)பச்சை
(3)பட்டு
(4)பத்து
(5)அப்பா
(6)பற்று
மேலே கூறப்பட்டுள்ள எழுத்துக்களில்
க் ச் ட் த் ப் ற் என்ற எழுத்துக்கள்
வன்மையாக ஒலிப்பதால் வல்லினம்
எனப்படும்
(1-ஆ- 1-2)
மெல்லினம்
மென்மையாக ஒலிக்கும் மெய்எழுத்துக்கள்
மெல்லினம் எனப்படும்
அவையாவன -
ங் ஞ் ண் ந் ம் ன் ஆகிய ஆறு எழுத்துக்களும்
மெல்லினம் ஆகும்
உதாரணம்-
(1)சங்கு
(2)பஞ்சு
(3)நண்டு
(4)பந்து
(5)கம்பு
(6)அன்பு
மேலே கூறப்பட்டுள்ள எழுத்துக்களில்
ங் ஞ் ண் ந் ம் ன் என்ற எழுத்துக்கள்
மென்மையாக ஒலிப்பதால் மெல்லினம்
எனப்படும்
(1-ஆ- 1-3)
இடையினம்
வன்மைக்கும் மென்மைக்கும் இடையில்
ஒலிக்கும் மெய்எழுத்துக்கள் இடையினம்
எனப்படும்
அவையாவன -
ய் ர் ல் வ் ழ் ள்ஆகிய மெய்எழுத்துக்கள்
வன்மைக்கும் மென்மைக்கும் இடையில்
ஒலிப்பதால் இடையினம் எனப்படும்
உதாரணம்-
(1)செய்தான்
(2)மார்பு
(3)பல்
(4)அவ்வை
(5)தமிழ்
(6)பள்ளி
மேலே கூறப்பட்டுள்ள எழுத்துக்களில்
ய் ர் ல் வ் ழ் ள்ஆகிய மெய்எழுத்துக்கள்
வன்மைக்கும் மென்மைக்கும் இடையில்
ஒலிப்பதால் இடையினம் எனப்படும்
மெய் எழுத்துக்கள்
தமிழ் மொழிக்கு உடல் போல் விளங்கும்
எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் ஆகும்
அத்துடன் இவை புள்ளி அல்லது ஒற்று
பெற்றிருப்பதால் இவை புள்ளி எழுத்துக்கள்
அல்லது ஒற்று எழுத்துக்கள் எனப்படும்
அவையாவன-
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
(1-ஆ-1)
மெய் எழுத்து வகைகள்
இவை மூன்று வகைப்படும்
அவையாவன -
(1)வல்லினம்
(2)மெல்லினம்
(3)இடையினம்
(1-ஆ- 1-1)
வல்லினம்
வன்மையாக ஒலிக்கும் மெய்எழுத்துக்கள்
வல்லினம் எனப்படும் .
அவையாவன-
க் ச் ட் த் ப் ற் என்ற ஆறு எழுத்துக்களும்
வல்லின எழுத்துக்கள் ஆகும்
உதாரணம்
(1)சுக்கு
(2)பச்சை
(3)பட்டு
(4)பத்து
(5)அப்பா
(6)பற்று
மேலே கூறப்பட்டுள்ள எழுத்துக்களில்
க் ச் ட் த் ப் ற் என்ற எழுத்துக்கள்
வன்மையாக ஒலிப்பதால் வல்லினம்
எனப்படும்
(1-ஆ- 1-2)
மெல்லினம்
மென்மையாக ஒலிக்கும் மெய்எழுத்துக்கள்
மெல்லினம் எனப்படும்
அவையாவன -
ங் ஞ் ண் ந் ம் ன் ஆகிய ஆறு எழுத்துக்களும்
மெல்லினம் ஆகும்
உதாரணம்-
(1)சங்கு
(2)பஞ்சு
(3)நண்டு
(4)பந்து
(5)கம்பு
(6)அன்பு
மேலே கூறப்பட்டுள்ள எழுத்துக்களில்
ங் ஞ் ண் ந் ம் ன் என்ற எழுத்துக்கள்
மென்மையாக ஒலிப்பதால் மெல்லினம்
எனப்படும்
(1-ஆ- 1-3)
இடையினம்
வன்மைக்கும் மென்மைக்கும் இடையில்
ஒலிக்கும் மெய்எழுத்துக்கள் இடையினம்
எனப்படும்
அவையாவன -
ய் ர் ல் வ் ழ் ள்ஆகிய மெய்எழுத்துக்கள்
வன்மைக்கும் மென்மைக்கும் இடையில்
ஒலிப்பதால் இடையினம் எனப்படும்
உதாரணம்-
(1)செய்தான்
(2)மார்பு
(3)பல்
(4)அவ்வை
(5)தமிழ்
(6)பள்ளி
மேலே கூறப்பட்டுள்ள எழுத்துக்களில்
ய் ர் ல் வ் ழ் ள்ஆகிய மெய்எழுத்துக்கள்
வன்மைக்கும் மென்மைக்கும் இடையில்
ஒலிப்பதால் இடையினம் எனப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.