சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு
என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக்
காஞ்சி.இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும்
நீளமானது இதுவே. மங்குடி மருதனார் என்னும்
புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில்
782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்
செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்
பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டிநாட்டின் தலை
நகரமான மதுரையின் அழகையும், வளத்தையும்
கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்
களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின்
தொடக்கத்தில் திரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப்
பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கு
ம் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த
உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும்
பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை
போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள்
செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத்
தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க்
கூறுகிறார்.
என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக்
காஞ்சி.இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும்
நீளமானது இதுவே. மங்குடி மருதனார் என்னும்
புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில்
782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்
செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்
பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டிநாட்டின் தலை
நகரமான மதுரையின் அழகையும், வளத்தையும்
கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்
களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின்
தொடக்கத்தில் திரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப்
பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கு
ம் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த
உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும்
பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை
போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள்
செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத்
தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க்
கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.