கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 22 ஜூலை, 2011

மதுரைக்காஞ்சி-1

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு
என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக்
காஞ்சி.இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும்
நீளமானது இதுவே. மங்குடி மருதனார் என்னும்
புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில்
782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்
செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்
பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டிநாட்டின் தலை
நகரமான மதுரையின் அழகையும், வளத்தையும்
கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்
களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின்
தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப்
பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கு
ம் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த
உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும்
பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை
 போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள்
செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌
தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க்
 கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;