கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
உயிர் வருக்கம்
1.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2.ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3.இல்லறம் அல்லது நல்லறம் அன்று
4.ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5.உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6.ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7.எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8.ஏவா மக்கள் மூவா மருந்து
9.ஐயம் புகினும் செய்வன செய்
10.ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு
11.ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12.ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13.அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.