கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 25 ஜூலை, 2011

சங்கமருவியகாலம்


கி்.பி. 100 - 600 ம் ஆண்டு காலப்பகுதியே சங்கம்
மருவியகாலம் எனப்படுகிறது. கி.பி. மூன்றாம்
நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்கு
உட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டயநாட்டை
யும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.நடு
நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்கு
ட்பட்டன.களப்பிரர் பாளிமொழியையும்,பல்லவர்
பிராகிருதமொழியையும் ஆதரித்தனர்.இவர்களின்
ஆட்சிக் காலத்தில் தமிழ்மொழி, தமிழ்க்கலைகள்,
தமிழ்ப்பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின. தமிழ்
மொழியில் பெரியளவிலும் சிறப்பானமுறையிலும்
நூல்கள் தோன்றவில்லை. எனவே,தமிழ்இலக்கிய
வரலாற்றிலே இக்காலப்பகுதியினை சங்கம்மருவிய
காலம் அல்லது 'இருண்ட காலம்' எனக் குறிப்பிடுவர்.
இருண்டஇக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள்
தோன்றின.பதினெண்கீழக்கணக்கு நூல்கள் சிலப்பதி
காரம் மணிமேகலை ஆகியன இக்காலகட்டத்தில்
எழுந்தனவெனக் கூறுவர் இவற்றுள் பதினெண்கீழ்க்
கணக்கு நூல்களைச் சங்க கால நூல்கள் என்று சிலர்
குறிப்பிடுவர். இந்நூல்கள் பொருளாலும் நடையாலும்
சங்க இலக்கியங்களினின்றும் வேறுபட்டுள்ளன. "அந்
நூல்கள் எல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்ப
தை அறிந்து கோடற்கு ஆதாரங்கள் கிட்டவில்லை"
என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுவர் இந்த இருண்ட
காலப் பகுதியிலேயே காரைக்காலம்மையாரும்
திருமூலரும் வாழ்ந்தனர் காரைகாலம்மையார் அற்புதத்
திருவந்தாதி திருவிரட்டை மணிமாலை திருவாலங்
காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு என்பவற்றை
இயற்றினார். இவை பதினோராம் திருமுறையில்
சேர்க்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;