சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை
இது 401 பாடல்களின் தொகுப்பு ஆகும் அத்துடன் இதில் காணப்படும் பாடல்கள் யாவும் நான்கு தொடக்கம் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்துள்ளது ஆகும் . இதுவும் ஏனைய பல பழந் தமிழ் நூல்களைப் போல 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டும் என்றும் ஒருபாடல் இடைச் செருகலாக இருக்ககூடும் என்றும் சில மக்கள் கருதுகின்றார்கள் .அத்துடன் இது பல வகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது ஆகும் .இதில் உள்ள பாடல்கள் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். ஆகவேதான் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. அத்துடன் இதில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார் .குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை நான்கு அடி, பேரெல்லை எட்டு அடி. அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடிவரையறையைக் கொண்ட பாடல் தொகுதி என்பதால் குறுந்தொகை என்று பெயர் பெற்றது. குறுந்தொகை நூலின் செய்யுள் தொகை கடவுள் வாழ்த்தை விடுத்து 401. இதனுள் 307, 391 ஆம் செய்யுட்கள் ஒன்பது அடி உடையன. எட்டு அடிப் பேரெல்லையைக் கடந்துள்ள இந்த இரண்டு பாடல்களும் ஐயத்திற்கு இடமானவை. 'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்' என்பது பழங் குறிப்பு. இதனைத் தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை. 10 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 205
இது 401 பாடல்களின் தொகுப்பு ஆகும் அத்துடன் இதில் காணப்படும் பாடல்கள் யாவும் நான்கு தொடக்கம் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்துள்ளது ஆகும் . இதுவும் ஏனைய பல பழந் தமிழ் நூல்களைப் போல 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டும் என்றும் ஒருபாடல் இடைச் செருகலாக இருக்ககூடும் என்றும் சில மக்கள் கருதுகின்றார்கள் .அத்துடன் இது பல வகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது ஆகும் .இதில் உள்ள பாடல்கள் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். ஆகவேதான் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. அத்துடன் இதில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார் .குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை நான்கு அடி, பேரெல்லை எட்டு அடி. அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடிவரையறையைக் கொண்ட பாடல் தொகுதி என்பதால் குறுந்தொகை என்று பெயர் பெற்றது. குறுந்தொகை நூலின் செய்யுள் தொகை கடவுள் வாழ்த்தை விடுத்து 401. இதனுள் 307, 391 ஆம் செய்யுட்கள் ஒன்பது அடி உடையன. எட்டு அடிப் பேரெல்லையைக் கடந்துள்ள இந்த இரண்டு பாடல்களும் ஐயத்திற்கு இடமானவை. 'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்' என்பது பழங் குறிப்பு. இதனைத் தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை. 10 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 205
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.