தமிழில் மிகவும் பழைய இலக்கண நூலாக விளங்குவது தொல்காப்பியம் ஆகும். இது கி.மு. நான்காம் நூற்றாண் டில்எழுதப்பட்டது. இதை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார். இந்தநூலில் எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம்,என்ற மூன்று அதிகாரங்கள்உள்ளன. ஒவ்வோர் அதிகாரத் திலும் ஒன்பது இயலாக இருபத்து ஏழு இயல்கள் உள்ளன. தமிழிலுள்ள இலக்கண நூல்களி லேயே மிகவும் பெரியதுதொல்காப்பியம் ஆகும். பொருள் அதிகாரத்தில் தமிழின் பொருள்இலக்கணமும், யாப்பு இலக்கணமும் சொல்லப் பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் உள்ள உவமை இயலில் அணி இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. இன்று தமிழில் உள்ள ஐந்திலக்கணங்களுக்கும் தோற்றுவாயாகத் தொல்காப்பி யம் திகழ்கிறது.
தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்னும் அறிஞர் பாயிரம் எழுதியுள்ளார். இவர் தொல்காப்பியருடன் பயின்றவர் என்று அறியமுடிகிறது. பாயிரம் என்பது தற்காலத்தில்எழுதப்படும் முன்னுரை போன்றது. நிலந் தரு திருவின்பாண்டிய மன்னனின் அவையில் அதங் கோட்டாசான் தலைமையில்தொல்காப்பியம் அரங்கே றியது என்று பாயிரத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. சூத்திரங்கள் இலக்கண அமைப்பை விளக்கும் முறையில் அமைந்துள்ளன. சிறு இலக்கண விதிகளைக் கூடவிட்டுவிடாமல் மிகவும் நுட்பமாகத் தொல்காப்பியம் கூறுகிறது.தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க் கினியர், சேனாவரையர் , தெய்வச்சிலையார், கல்லாடர், பேராசிரியர்ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.