கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 6 ஆகஸ்ட், 2011

அகநானுறு-1


தமிழ்நூல் தொகுப்பில் உள்ள
ஒரு நூல் இதுவாகும்.அத்துடன்
இது சங்ககாலத்தைச் சேர்ந்த
எட்டுத்தொகை எனப்படும்
நூல்களில் இதுவும் ஒன்றாகும்
அத்துடன் இது ஓர் அகத்திணை
சார்ந்த நூல் என்பதோடு இதில்
நானூறு பாடல்களும் அடங்கி
உள்ளதால் இது அகநானூறு என
அழைக்கப்படுகிறது .அத்துடன்
இதற்கு நெடுந்தொகை என்ற
பெயரும் உண்டு இவ் அகநானுறில்
அடங்கியுள்ள பாடல்கள் ஒரே
புலவராலோ அல்லது ஒரே
காலத்திலேயோ இயற்றப்பட்டவை
யல்ல. இது பல்வேறுபட்ட புலவர்க
ளாள் பல்வேறுபட்ட காலங்களில்
பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள்
மிகக் குறைந்த அளவாகப் 13அடி
களையும், கூடிய அளவு 31 அடிகளை
யும் கொண்டு அமைந்துள்ளன.எட்டுத்
தொகை நூல்களுள் குறுந்தொகை
நற்றிணை அகநானூறு, ஐங்குறுநூறு,
கலித்தொகைஆகிய ஐந்தும் அகம்
பற்றியன. இவற்றுள் அகம் என்னும்
சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு
மட்டுமே. அகத்தொகையுள் நீண்ட
பாடல்களைக் கொண்டமையால் இதனை,
'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.கடவுள்
வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில்
400 பாடல்கள் உள்ளன.இவற்றினை மூன்று
பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அவையாவன

1 . களிற்றியானை நிரை
இதில் 1 தொடக்கம் 120 பாடல்கள்
உள்ளது
2.மணி மிடை பவளம்
இதில் 121 தொடக்கம் 300 பாடல்கள்
உள்ளது

3 .நித்திலக் கோவை
இதில் 301 தொடக்கம் 400 பாடல்கள்
உள்ளது

அத்துடன அகநானுறில் உள்ள பாடல்கள்
யாவும் தக்கதொரு நியமத்தைக் கொண்டு
அமைந்துள்ளன.அத்துடன் ஒற்றைப்பட்ட
எண்களில் அமைந்துள்ள பாடல்கள் 200-ம்
பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டை
ப்பட்ட எண்களில் அமைந்துள்ள பாடல்கள்
2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித்திணையைச்
சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்
படுபவை 40-ம் முல்லைத்திணையைச் சேர்ந்
தவை. இரட்டைப்பட்ட எண்களில் 6 எனப்
படுபவை 40-ம் மருதத்திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட்ட எண்களில் 10 எனப்படுபவை
40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.இத்
தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி
கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத்
தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப்
பெருவழுதியார். இத்தொகை பாடிய புலவர்கள்
நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப்புலவர்கள்
146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில்
மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர்
அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர்
வணிகர், வேளாளர் எனப்பட்ட பல தரப்பினர்
புலவர்களாக இருந்துள்ளனர் என்பதை அவர்கள்
தங்கள் பெயர்களின்முன்னால் அமையும் அடை
மொழிகளால் தெரிவித்துள்ளனர் இதில் உள்ள
மூன்று பாடல்களின் 114, 117, 165ஆகியவற்றில்
ஆசிரியர்களின் பெயர்கள் காணப்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;