இந்த இலக்கியம் பெருமளவில் தோன்றியது
பல்லவர் காலத்திலேதான் வேறு எந்தமொழி
யிலும் தமிழில் தோன்றியளவு பக்தி இலக்கியம்
தோன்றவில்லை இக்காலத்தில் எழுந்த பக்தி
இலக்கியம் இருவகைப்பட்டது.
அவையாவன
1 .தனித்தனிப் பதிகங்களால் பக்தி அனுபவங்களை
வெளிப்படுத்துதல்,
2 .பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல்
என அவை இருவகையாக உள்ளன. தனித்தனிப்
பதிகங்களுள் சில, அகத்துறைகள் தழுவி
அமைந்துள்ளன. பெரும்பாலானவை முன்னிலைப்
பரவலாகக் கடவுள் வாழ்த்தாக உள்ளன.
பிரபந்தங்களுள் பெரும்பாலானவை அகத்திணை
இலக்கணங்களுக்கு ஏற்ப அமைந்தவை.
பதிகங்களிலும் பிரபந்தங்களிலும் அன்பின் ஐந்திணை
தழுவி வந்தவை சிலவே. ஏனைய பல கைக்கிளை
பெருந்திணை சார்ந்தவை. பக்திப் பேரன்பை உணர்த்த
அவை பொருத்தமான திணைகள் என்பதே இதற்குக்
காரணம் எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.