குறவஞ்சி இலக்கியம்
சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க
ஒன்றாகத் திகழ்வது குறவஞ்சி என்ற
இலக்கிய வகை ஆகும்.
குறவஞ்சி என்ற பெயர்வரக்காரணம்
குறவஞ்சி என்பது குற+வஞ்சி என்று
பிரியும். வஞ்சி என்றால் வஞ்சிக்கொடி
போன்ற பெண் என்று பொருள். குறவஞ்சி
என்பது குறவர் குலத்தில் பிறந்த வஞ்சிக்
கொடி போன்ற பெண் என்ற பொருளைத்
தரும். இந்த நூலில் குறத்தி குறி கூறுதல்,
குறத்தி குறவனுடன் உரையாடுதல்,
குறத்தியின் செயல்கள், குறி வகைகள்
போன்றவை முதன்மை இடம் பெறுவதால்
இந்த இலக்கிய வகை குறவஞ்சி என்ற
பெயரைப் பெற்றுள்ளது என்று விளக்கம்
அளிப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.