கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 24 அக்டோபர், 2011

தமிழ் எழுத்துக்கள்- 6

சார்பு எழுத்து
முதல் எழுத்துகளைச் சார்ந்து வருபவை சார்பு 
எழுத்துகள் எனப்படுகின்றன. உயிர்மெய், ஆய்தம்,
 உயிரளபெடை,ஒற்றளபெடை, குற்றியலுகரம். 
குற்றியலிகரம்ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம், 
மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகியபத்தும் 
சார்பு எழுத்துகள் ஆகும்.
மாத்திரை 
எழுத்துகள் ஒலிக்கும் நேரத்தை மாத்திரை 
என்று கூறுவர்.எந்த எந்த எழுத்துகள் எவ்வளவு 
நேரம் ஒலிக்கும் என்பதைத் தெளிவாக வரைய
றத்து இலக்கணநூல்கள் கூறுகின்றன ஒரு
எழுத்தை உச்சரிக்கும் காலஅளவை அதாவது
எழுத்தைஉச்சரிக்கும் நேரத்தை "இயல்பு எழும்
மாந்தர் இமைஒருமாத்திரை அல்லது நொடி
மாத்திரை" ஆகும் என இலக்கணநூல்கள் கூறு
கின்றன.அதாவது ஒருமாத்திரை என்பது சராசரி
மனிதனின் கண் இமைக்கும் காலம் அல்லது
விரல் நொடிக்க எடுக்கும் காலம் ஆகும்

மொழி
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனைப் 
பிரித்துக் காட்டுவது மொழி. மொழி சொற்
களால் உருவாகிறது. சொல், எழுத்துகளின்
சேர்க்கை. எழுத்தின் அடிப்படை ஒலி. மனித 
உடலில் இருந்துஒலி எப்படித் தோன்றுகிறது 
என்பதைத்தமிழ் இலக்கண நூல்கள் விளக்கு
கின்றன. மொழியின் அடிப்படை ஒலி என்பதா
ல் ஒவ்வோர் எழுத்தும் எப்படிப் பிறக்கின்றன
என்பது பற்றியும்இலக்கண நூல்களில்கூறப்
பட்டுள்ளது. மூக்கு உதடு பல் நாக்கு அண்ணம் 
ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டால யிர் 
எழுத்துகளும்,மெய் ழுத்துகளும் எவ்வாறு 
தோன்றுகின்றன என்றுஇலக்கண நூல்கள் 
துல்லியமாகக் கூறுகின்றன.தமிழில் எல்லா 
எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவ
தில்லை. சொல்லின் முதல் எழுத்தாக வரக்
கூடியஎழுத்துகள் இவை என்று வரையறை 
செய்யப்பட்டுள்ளது.அது போலவே சொல்லு
க்கு இறுதியில் வரக்கூடிய எழுத்துகள்பற்றி
யும் வரையறை செய்யப்பட்டுள்ளது. சொல்
லுக்கு இடையில்ஒரு மெய் எழுத்துக்கு 
அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்ற 
வரையறையும் தரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;