பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய
மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின்
மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை
ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே
சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி
விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு
எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று
உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான
இவர்கள் கரூரையும் வஞ்சியையும் தலைநகராகக்
கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியை
யும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.முற்காலச்
சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள்
உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி
சிறிதளவு செய்திகள் உள்ளன.சேர அரசர்களைப்
பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன.
குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்தி
களைத் தருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.