பத்துப் பாட்டில் மூன்றாவது பாட்டு சிறுபாணாற்றுப்படை
ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இது 269 அடிகளை
உடையது. இதனைப் பாடியவர் இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்தத்தனார். இப்பெயரில் மூன்று செய்திகள்
உள்ளன. அவை:
1)
நத்தத்தனார்
இது புலவரின் இயற்பெயர். சிலர் தத்தனார் என்பதே
இயற்பெயர் என்பர். சான்றோர்களின் பெயர்களுக்கு
முன்னால் "ந" சேர்ப்பதுபழங்கால மரபு. அதனால்
தத்தனார் என்பதற்கு முன்பு "ந" சேர்ந்து நத்தத்தனார்
என்றாயிற்று என்பர்.
2)நல்லூர் என்பது இவர் பிறந்த ஊர்.
3)
இடைக்கழி நாடு:
நல்லூர் என்னும் சிற்றூர் இருந்த நாடு. இது
இன்றும் கூட மதுராந்தகத்துக்கு அருகில்
எடக்கு நாடு என்னும் பெயரில் இருப்பதாகக்
கூறுவர்.
ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இது 269 அடிகளை
உடையது. இதனைப் பாடியவர் இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்தத்தனார். இப்பெயரில் மூன்று செய்திகள்
உள்ளன. அவை:
1)
நத்தத்தனார்
இது புலவரின் இயற்பெயர். சிலர் தத்தனார் என்பதே
இயற்பெயர் என்பர். சான்றோர்களின் பெயர்களுக்கு
முன்னால் "ந" சேர்ப்பதுபழங்கால மரபு. அதனால்
தத்தனார் என்பதற்கு முன்பு "ந" சேர்ந்து நத்தத்தனார்
என்றாயிற்று என்பர்.
2)நல்லூர் என்பது இவர் பிறந்த ஊர்.
3)
இடைக்கழி நாடு:
நல்லூர் என்னும் சிற்றூர் இருந்த நாடு. இது
இன்றும் கூட மதுராந்தகத்துக்கு அருகில்
எடக்கு நாடு என்னும் பெயரில் இருப்பதாகக்
கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.