சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய
பரிபாடல்
கடைச் சங்கத்துப் புலவர்கள் அருளியச் செய்தபரிபாடல்கள் எழுபது எனத் தெரிந்தாலும் நமக்கும்
கிடைத்துள்ளவை 22 முழுப்பாடல்களும், பழைய
உரைகளிலிருந்தும் புறத்திரட்டுத் தொகை நூலிலி
ருந்தும் இரண்டு பாடல்களும், சில பாடல்களின்
உறுப்புக்கலுமேயாகும். இவ்விருபத்திரண்டனுள்,
திருமாலுக்குரியவை ஆறு (1, 2, 3, 4, 13, 15),
முருகனுக்குரியவை எட்டு(5, 8, 9, 14, 17, 18, 19, 21),
வையைக்குரியவை எட்டு (6, 7, 10, 11, 12, 16, 20, 22).
இவற்றின் பின்னே உள்ள பகுதிகளுள்
திருமாலுக்குரிய முழுப்பாடல் ஒன்று;
வையைக்குரிய முழுப்பாடல் ஒன்று;
உறுப்பு ஒன்று; மதுரைக்குரிய உறுப்புகள் ஏழு;
சில உறுப்புகள் இன்ன வகையைச் சார்ந்தன
வென்று விளங்கவில்லை. எட்டுத்தொகை
நூல்களுள் இஃதொன்றே இசை நூலாகும்.
இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றித்
தெரியவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை
25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும்
தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். ஒவ்வொரு
பாடலின் முடிவிலும் துறை, இயற்றிய ஆசிரியர்
பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர்
பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால்முதல்
பாடலுக்கும் 22ஆம் பாடலுக்கும் இக்குறிப்புகள்
தெளிவாக இல்லை. மேலும் முதல் பாடலில் 14
முதல் 28ஆம் வரி வரை உள்ள பகுதி தெளிவின்றி
உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.