சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய
கலித்தொகை
கலித்தொகை மொத்தம் 150 பாடல்களைக் கொண்டதாகும். இவற்றில் முதல் பாடல் கடவுள் வாழ்த்து. பின்னர், பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற வரிசையில் ஐந்திணைகளுக்கும் உரிய பாடல்கள் அமைந்துள்ளன. இவை முறையே 35, 29, 35, 17, 33 பாடல்களைக் கொண்டுள்ளன. பெருங்கடுங்கோன் பாலை பாடல்களையும், கபிலர் குறிஞ்சிப் பாடல்களையும், மருதன் இளநாகனார் மருதப் பாடல்களையும், அருஞ்சோழன் நல்லுருத்திரனார் முல்லைப் பாடல்களையும், நல்லந்துவனார் நெய்தல் பாடல்களையும் பாடியதாகப் பாடல் ஒன்று கூறுகிறது. உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர் குறிப்பிலிருந்து நெய்தற் பகுதியைச் செய்த நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடி, இத் தொகையைத் தொகுத்தார் என்று கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.