சுரத்தின் தன்மை
சிறுபாணன் பரிசு பெற செல்லும் வழி பாலை நிலம் - இது நீண்ட மணல் பரப்பை உடையது. குடிப்பதற்கு நீரோ வழிக்களைப்பை நீக்கும் மர நிழலோ இல்லாதது. வெப்பம் மிகுதியானது. சூரைக்காற்று எப்பொழுதும் வீசிப் புழுதியைக் கிளப்பும். வழிப்பறி கொள்ளையர்களால் எப்பொழுதும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் நிரம்பியது.
கொடுமையான வறுமையை உடைய சிறுபாணன் இத்தகைய கடுமையான பாலை நிலத்தின் வழி செல்கிறான். வழி நடைக் களைப்பு அவனை வாட்டுகிறது. அப்பொழுதும்கூட அவனது சிந்தனை சுயநலம் உடையதாக இல்லை. பொது நலம் நாடியதாகவே இருக்கிறது.
தன் வறுமையைப் போக்குகிற வகையில் மிகுந்த செல்வத்தையும் தேர்களையும் யானைகளையும் குதிரைகளையும் தனக்கு வழங்கிய நல்லியக் கோடனிடம் தன்னைப் போலவே வறுமையில் வாடுகின்ற - வழியில் கண்ட சிறுபாணர்களை அவர்கள் பால் ஆற்றுப்படுத்துகிறான.
இவன் தன்னலம் கருதுபவனாக இருப்பானானல் தனக்குக் கிடைத்தப் பரிசு பற்றியோ பரிசு வழங்கிய நல்லியக்கோடனைப் பற்றியோ அவர்களிடம் கூறியிருக்க மாட்டான். தான் பெற்றதைப் போல பெருஞ்செல்வத்தைப் பிறரும் பெற வேண்டும் என்னும் உயரிய சிந்தனை - தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பரந்த உள்ளம் இப்பாணனுக்கு இருந்ததைக் காண முடிகிறது.
தான் செல்லுகின்ற பாதை கொடுமை நிறைந்ததாகவும், கொள்ளையர்களின் அச்சுறுத்தல் நிறைந்ததாகவும் இருந்தும் கூட அதனைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் வறிய பாணர்களுக்கு மிகப் பொறுமையாக நல்லியக்கோடனை அடைவதற்கு உரிய வழி வகைகளையும் அவனது வள்ளல் தன்மைகளையும் எடுத்துக்கூறி ஆற்றுப்படுத்துவதிலிருந்து சிறுபாணனின் சிறந்த மானிடப் பண்பு வெளிப்படுவதைக் கண்டு வியப்படையத் தோன்றுகிறது.
தன் வறுமையைப் போக்குகிற வகையில் மிகுந்த செல்வத்தையும் தேர்களையும் யானைகளையும் குதிரைகளையும் தனக்கு வழங்கிய நல்லியக் கோடனிடம் தன்னைப் போலவே வறுமையில் வாடுகின்ற - வழியில் கண்ட சிறுபாணர்களை அவர்கள் பால் ஆற்றுப்படுத்துகிறான.
இவன் தன்னலம் கருதுபவனாக இருப்பானானல் தனக்குக் கிடைத்தப் பரிசு பற்றியோ பரிசு வழங்கிய நல்லியக்கோடனைப் பற்றியோ அவர்களிடம் கூறியிருக்க மாட்டான். தான் பெற்றதைப் போல பெருஞ்செல்வத்தைப் பிறரும் பெற வேண்டும் என்னும் உயரிய சிந்தனை - தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பரந்த உள்ளம் இப்பாணனுக்கு இருந்ததைக் காண முடிகிறது.
தான் செல்லுகின்ற பாதை கொடுமை நிறைந்ததாகவும், கொள்ளையர்களின் அச்சுறுத்தல் நிறைந்ததாகவும் இருந்தும் கூட அதனைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் வறிய பாணர்களுக்கு மிகப் பொறுமையாக நல்லியக்கோடனை அடைவதற்கு உரிய வழி வகைகளையும் அவனது வள்ளல் தன்மைகளையும் எடுத்துக்கூறி ஆற்றுப்படுத்துவதிலிருந்து சிறுபாணனின் சிறந்த மானிடப் பண்பு வெளிப்படுவதைக் கண்டு வியப்படையத் தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.