பகிர்ந்தளித்தல்
கடுமையாக வறுமையில் வாடிய சிறுபாணன் தான் பெற்ற பெருஞ்செல்வத்தைப் பாதுகாப்பாகத் தான் மட்டுமே வைத்து அனுபவித்தான் இல்லை. தன் பிள்ளைகளுக்கு எதிர்காலத்திற்குத் தேவைப்படும் என்று சேமித்து வைத்தானில்லை - மறைத்து வைத்தானில்லை. தன்னை நாடி வந்தவர்களுக்கும் உற்றார்களுக்கும் உறவினர்களுக்கும் அதனைப் பகிர்ந்தளித்தான். இத்தகைய உயரிய உள்ளம் செல்வந்தர்களுக்குக் கூட வாய்த்தல் அரிது. ஆனால் இந்த வறிய பாணனனுக்கு வாய்த்திருக்கிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் வள்ளுவன் காட்டும் உயர்ந்த உள்ளம் இவர்களிடத்து இருக்கிறது. இத்தகைய மனித மாண்பு வாய்க்கப்பெற்ற மனிதர்களால்தான் இந்த உலகம் நீடு வாழ்கிறது.
கடுமையாக வறுமையில் வாடிய சிறுபாணன் தான் பெற்ற பெருஞ்செல்வத்தைப் பாதுகாப்பாகத் தான் மட்டுமே வைத்து அனுபவித்தான் இல்லை. தன் பிள்ளைகளுக்கு எதிர்காலத்திற்குத் தேவைப்படும் என்று சேமித்து வைத்தானில்லை - மறைத்து வைத்தானில்லை. தன்னை நாடி வந்தவர்களுக்கும் உற்றார்களுக்கும் உறவினர்களுக்கும் அதனைப் பகிர்ந்தளித்தான். இத்தகைய உயரிய உள்ளம் செல்வந்தர்களுக்குக் கூட வாய்த்தல் அரிது. ஆனால் இந்த வறிய பாணனனுக்கு வாய்த்திருக்கிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் வள்ளுவன் காட்டும் உயர்ந்த உள்ளம் இவர்களிடத்து இருக்கிறது. இத்தகைய மனித மாண்பு வாய்க்கப்பெற்ற மனிதர்களால்தான் இந்த உலகம் நீடு வாழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.