(29)
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்இ அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்
(பதவுரை)
மருவு இனிய சுற்றமும் - தழுவிய இனிய உறவும், வான் பொருளும் - மேலாகிய பொருளும், நல்ல உருவும் - நல்ல அழகும், உயர்குலமும் எல்லாம் - உயர்வாகிய குலமும் என்னும் இவையெல்லாம், திருமடந்தை ஆம் போது - சீதேவி வந்து கூடும்பொழுது, அவளோடும் ஆகும் - அவளுடனே வந்து கூடும்; அவள் பிரிந்து போம்போது - அவள் நீங்கிப் போம்பொழுது, அவளொடு போம் - அவளுடனே நீங்கிப் போகும்.
திருமடந்தை - இலக்குமி, ஆகும் போகும் என்பன ஆம் போம் என்றும், பொழுது என்பது போது என்றும் விகாரப்பட்டன.
சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலையுடையனவல்ல எ - ம்.
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்இ அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்
(பதவுரை)
மருவு இனிய சுற்றமும் - தழுவிய இனிய உறவும், வான் பொருளும் - மேலாகிய பொருளும், நல்ல உருவும் - நல்ல அழகும், உயர்குலமும் எல்லாம் - உயர்வாகிய குலமும் என்னும் இவையெல்லாம், திருமடந்தை ஆம் போது - சீதேவி வந்து கூடும்பொழுது, அவளோடும் ஆகும் - அவளுடனே வந்து கூடும்; அவள் பிரிந்து போம்போது - அவள் நீங்கிப் போம்பொழுது, அவளொடு போம் - அவளுடனே நீங்கிப் போகும்.
திருமடந்தை - இலக்குமி, ஆகும் போகும் என்பன ஆம் போம் என்றும், பொழுது என்பது போது என்றும் விகாரப்பட்டன.
சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலையுடையனவல்ல எ - ம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.