சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளiர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
(பதவுரை)
மரம் - மரங்களானவை, மாந்தர் குறைக்கும் தனையும் - (தம்மை) மனிதர் வெட்டுமளவும், குளிர்நிழலைத் தந்து மறைக்கும் - (அவருக்குங்) குளிர்ச்சியாகிய நிழலைக் கொடுத்து வெயிலை மறைக்கும் (அதுபோல), அறிவு உடையோர் - அறிவுடையவர்; சாம்தனையும் - (தாம்) இறந்து போமளவும், தீயனவே செய்திடினும் - (பிறர் தமக்குத்) தீங்குகளையே செய்தாராயினும், தாம் அவரை ஆம் தனையும் காப்பர். தாம் அவரையும் தம்மாலே ஆகுமளவும் காப்பார்.
ஆம்: அசை. கண்டீர்: முன்னிலையசை.
அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வார் எ - ம். (30)
மூதுரை மூலமும் உரையும்முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.