அறத்தினும் சிறந்தது இல்லை.
இனத்துள் இறைமையும் செய்து - மனக்கினிய
போகந் தருதலால் பொன்னே! அறத்துணையோடு
ஏகமா நண்பொன்றுமில். 13
அறமே துணை
காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர் - மூட்டும்
எரியின் உடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட!
தெரியின் அறமே துணை. 14
உலகத்து அறம்
நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கு - யாப்புடைக்
காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி
ஆழிசூழ் வையத்தறம். 15
இளமையில் அறம் செய்க
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறு காலைச் செய். 16
படுத்தவன் எழுதல் அரிது
சாலச் செய்வாரே தலைப்படுவார் - மாலைக்
கிடந்தேன் எழுதல் அரிதால் மற்றென்கொல்
அறங்காலை செய்யாதவாறு. 17
புன்மை பெரிது புறம்
நின்ற நாள் யார்க்கு உணர்வரிது - என்றொருவன்
நன்மை புரியாது நாளுவப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம். 18
அஞ்சாது நல்லறம் செய்
மீட்டொரு நாளடையும் தாராதால் - வீட்டுதற்கு
வஞ்சஞ்செய் குற்றம் வருதலால் நன்றாற்றி
அஞ்சாது அமைந்திருக்கல் பாற்று. 19
தருமம் தலை நிற்றல் நன்று
அன்றே பிறருடைமை யாயிருக்கும் - நின்ற
கருமத்தார் அல்லாத கூற்றின் கீழ் வாழ்வார்
தருமந்தலை நிற்றல் நன்று. 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.