சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
மா முது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!
விரையினர், மலரினர், விளங்கு மேனியர்,
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர், 55
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார், 60
'காதலற் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல்,
தீது அறுக!' என ஏத்தி, சின்மலர் கொடு தூவி,
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-'தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை 65
உப்பாலைப் பொன் கோட்டு உழையதா, எப்பாலும்
செரு மிகு சினவேல் செம்பியன்
ஒரு தனி ஆழி உருட்டுவோன்' எனவே. 68
மா முது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!
விரையினர், மலரினர், விளங்கு மேனியர்,
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர், 55
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார், 60
'காதலற் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல்,
தீது அறுக!' என ஏத்தி, சின்மலர் கொடு தூவி,
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-'தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை 65
உப்பாலைப் பொன் கோட்டு உழையதா, எப்பாலும்
செரு மிகு சினவேல் செம்பியன்
ஒரு தனி ஆழி உருட்டுவோன்' எனவே. 68
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.