கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 5 டிசம்பர், 2011

ஐந்திணை எழுபது-6


தோழி தலைமகனைக் கண்டு வரைவு கடாயது

பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல்
மரையான் குழவி குளம்பின் துகைக்கும்
வரையக நாட! வரையாய வரின், எம்
நிரைதொடி வாழ்தல் இலள். 10

வரை - மலை
தொடி - வளையல்

"வேடர்கள் தேனடைகளைக் கவர்ந்து செல்லும்போது கீழே நழுவி வீழ்ந்த தேனடைகளை மான் கன்றுகள் கால் குளம்புகளால் சிதைக்கும் மலைநாட்டுத் தலைவனே! நீ தலைமகளை விரைவில் மணந்து கொள்வாய். இல்லையென்றால் அவள் துன்பத்தினால் இறந்துபோவாள்" என்று தலைவனிடம் தோழி கூறினாள்.

தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் கேட்ப, இயற்பட மொழிந்தது

கேழல் உழுத கரி புனக் கொல்லையுள்,
வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும்
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான், என் தோழி
நேர்வளை நெஞ்சு ஊன்று கோல். 11

கேழல் - பன்றி
கோல் - அம்பு

"பன்றிகள் கொம்புகளால் கிளறியதும், வேடர்களால் சுட்டு எரிக்கப்பட்ட தினைப்புன நிலத்தில் ஆண் குரங்குகள் வாழையின் முற்றிய காய்களைப் பழுக்கச் செய்வான் வேண்டி புதைத்து வைத்துப் பின் புதைத்த இடம் தெரியாமல் வருந்தும்படியாக தாழ்ந்து ஓடும் அருவிகளை உடைய மலைநாட்டுத் தலைவன் என் தோழியின் (தலைவியின்) மார்பில் பாய்ந்த அம்பைப் போன்ற தெளிவான உறுதிமொழிகளைத் தந்துவிட்டான்" எனத் தோழி தலைமகனைப் பார்த்துக் கூறினாள்.

தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது

பெருங் கை இருங் களிறு ஐவனம் மாந்தி,
கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து. 12

துஞ்சும் - உறங்கும்
ஏமாப்பு - பாதுகாப்பு

"ஆண் யானை மலையில் உள்ள நெற்பயிரை மேய்ந்து கரிய அடிப்பகுதியையுடைய மாமரச் சோலையில் உறங்கும். இத்தகைய சோலைகள் உடைய மலைநாட்டுத் தலைவனின் நட்பானது, அவனை நெருங்கி வாழ்பவர்க்கும் பாதுகாவலாகப் பொருந்தும் இயல்புடையதாகும்" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;