கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

குண்டலகேசி-6

குண்டலகேசி பாடிய பாடல்கள்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

வெட்டிய கேசத் தோடும் விளங்குசேற்று உடிலனோடும்
முட்டரும் அரையின் மீது முடையுடைக் கந்தை தன்னை
இட்டமாய்த் திரிந்தேன் முன்னாள் இனியதை இன்னா என்றும்
மட்டரும் இன்னா உள்ள பொருளையும் இனுதஎன்றேனே. 1

நண்பகல் உறங்கும் சாலை நடுநின்றே வெளியே போந்தேன்
தன்புனல் கழுகுக் குன்றம் தனையடைந்து அலைந்த போது
நன்புடை அறவோர் கூட்டம் நடுவணே மாசில் தூயோன்
பண்புடைப் புத்தன் தன்னைப் பாவியேன் கண்டேன் கண்ணால்


அண்ணலை நேரே கண்டேன் அவன்முனே முழந்தாள் இட்டு
மண்ணதில் வீழ்ந்து நைந்து வணங்கினேன் வணங்கி நிற்கத்
தண்ணவன் என்னை நோக்கித் தகவொரு பத்தா இங்கே
நண்ணுதி என்றே சாற்றி நாடரும் துறவை ஈந்தான். 3

அலைந்துமே அங்கநாட்டோடு அண்டுமா மகத நாடு
மலைந்த பேர் வச்சி யோடு மன்னுகோ சலமும் காசி
நலந்தரு நாடு தோறும் நாடினேன் பிச்சைக் காக
உலைந்த இவ் ஐம்ப தாண்டில் எவர்க்குமே கடன்பட்டில்லேன். 4

துறவியேன் பத்தா கட்டச் சீவரம் கொடுக்கும் மாந்தர்
முறையுடை மணத்தராகி நீள்புவி வாழ்ந்து நாளும்
குறைவில்நல் வினைகள் ஈட்டிக் கோதின் மெய் அறிவர் ஆகி
முறைமையாய் மலங்கள் நீங்கி முத்தியை அடைவார் திண்ணம். 5 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;