6
|
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்,
|
|
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்,
|
|
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும்,
|
|
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்,
|
|
5
|
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின்
|
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது
|
|
ஆனிலை உலகத்தானும், ஆனாது,
|
|
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்
|
|
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம்
|
|
10
|
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
|
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து,
|
|
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச்
|
|
சிறு கண் யானை செவ்விதின் ஏவி,
|
|
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து,
|
|
15
|
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம்
|
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி,
|
|
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர்
|
|
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே!
|
|
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த
|
|
20
|
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே!
|
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார்
|
|
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே!
|
|
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை
|
|
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே!
|
|
25
|
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய
|
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி!
|
|
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
|
|
ஒண் கதிர் ஞாயிறு போலவும்,
|
|
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே!
|
திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.
|
7
|
களிறு கடைஇய தாள்,
|
|
கழல் உரீஇய திருந்து அடி,
|
|
கணை பொருது கவி வண் கையால்,
|
|
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,
|
|
5
|
மா மறுத்த மலர் மார்பின்,
|
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
|
|
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
|
|
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
|
|
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
|
|
10
|
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ!
|
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து
|
|
மீனின் செறுக்கும் யாணர்ப்
|
|
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே.
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை; மழபுல வஞ்சியும் ஆம்.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
|
8
|
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக,
|
|
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது,
|
|
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
|
|
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை,
|
|
5
|
கடந்து அடு தானைச் சேரலாதனை
|
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்!
|
|
பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
|
|
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி;
|
|
அகல் இரு விசும்பினானும்
|
|
10
|
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே.
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
| |
சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.
|
9
|
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
|
|
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
|
|
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
|
|
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
|
|
5
|
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
|
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
|
|
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
|
|
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச்
|
|
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,
|
|
10
|
முந்நீர் விழவின், நெடியோன்
|
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.