கோவலர் வாடையால் துன்புறுதல்
வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென,
ஆர்கலி முனைஇய கொடுங் கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி,
புலம் பெயர் புலம்பொடு கலங்கி, கோடல் 5
நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,
மெய்க் கொள் பெரும் பனி நலிய, பலருடன்
கைக் கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க
கூதிர்க் கால நிலை
மா மேயல் மறப்ப, மந்தி கூர,
பறவை படிவன வீழ, கறவை 10
கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.