கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்
|
|
வண்ண மார்பின் தாரும் கொன்றை:
|
|
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
|
|
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப:
|
|
5
|
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை
|
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே:
|
|
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்
|
|
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்:
|
|
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை
|
|
10
|
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே
|
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
|
|
நீர் அறவு அறியாக் கரகத்து,
|
|
தாழ் சடைப் பொலிந்த, அருந் தவத்தோற்கே
|
செவ்வாய், 13 டிசம்பர், 2011
புறநானூறு-3
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.