இந்நூல் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. யசோதரன் சரிதம் தமிழில் வேறு எந்த நூலிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடமொழியில் யசோதரன் கதை பல படைப்புகளில் இடம் பெறுகின்றது. சைன புராணங்களில் மகாபுராணம் சிறப்புடைய ஒன்று. அதில் தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், அரசர்கள் பன்னிருவர், பலதேவர் ஒன்பது பேர், வாசுதேவர் ஒன்பது பேர், பிரதி வாசுதேவர் ஒன்பது பேர் என அறுபத்து மூவர் வரலாறு இடம்பெறும். இம்மகாபுராணத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஜினதேவரும், கி.பி. 10ஆம் நூற்றாண்டில் மல்லிசேனரும் எழுதினர். மற்றொரு புராணமான உத்தர புராணத்தை ஜினசேனரின் மாணாக்கர் குணபத்திர முனிவர் எழுதினார் என்பர். இந்த உத்தர புராணத்தில்தான் முதல் முதலாக யசோதரன் சரிதம் கூறப்படுகிறது.
சனி, 24 டிசம்பர், 2011
யசோதர காவியம்-2
இந்நூல் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. யசோதரன் சரிதம் தமிழில் வேறு எந்த நூலிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடமொழியில் யசோதரன் கதை பல படைப்புகளில் இடம் பெறுகின்றது. சைன புராணங்களில் மகாபுராணம் சிறப்புடைய ஒன்று. அதில் தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், அரசர்கள் பன்னிருவர், பலதேவர் ஒன்பது பேர், வாசுதேவர் ஒன்பது பேர், பிரதி வாசுதேவர் ஒன்பது பேர் என அறுபத்து மூவர் வரலாறு இடம்பெறும். இம்மகாபுராணத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஜினதேவரும், கி.பி. 10ஆம் நூற்றாண்டில் மல்லிசேனரும் எழுதினர். மற்றொரு புராணமான உத்தர புராணத்தை ஜினசேனரின் மாணாக்கர் குணபத்திர முனிவர் எழுதினார் என்பர். இந்த உத்தர புராணத்தில்தான் முதல் முதலாக யசோதரன் சரிதம் கூறப்படுகிறது.
லேபிள்கள்:
யசோதர காவியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.