வழியின் அருமை எடுத்துரைத்தல்
பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும் எனல்
விளை புனம் நிழத்தலின், கேழல் அஞ்சி,
புழைதொறும் மாட்டிய இருங் கல் அடாஅர்
அரும் பொறி உடைய, ஆறே; நள் இருள் அலரி 195
விரிந்த விடியல், வைகினிர், கழிமின்
பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்து செல்லும் வகை
நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின்,
முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்,
கரந்து, பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே;
குறிக் கொண்டு, மரம் கொட்டி, நோக்கி, 200
செறி தொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச,
வறிது நெறி ஒரீஇ, வலம் செயாக் கழிமின்
கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லவேண்டும் விதம்
புலந்து, புனிறு போகிய புனம் சூழ் குறவர்,
உயர்நிலை இதணம் ஏறி, கை புடையூஉ,
அகன் மலை இறும்பில் துவன்றிய யானைப் 205
பகல் நிலை தவிர்க்கும் கவண் உமிழ் கடுங் கல்
இரு வெதிர் ஈர்ங் கழை தத்தி, கல்லெனக்
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன:
வரும், விசை தவிராது; மரம் மறையாக் கழிமின் 210
காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடத்தல்
உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி,
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்,
குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர், அகழ் இழிந்தன்ன, கான் யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய; வழாஅல் ஓம்பி, 215
பரூஉக் கொடி வலந்த மதலை பற்றி,
துருவின் அன்ன புன் தலை மகாரொடு.
ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்
பாசி படிந்த குளக்கரைகளைக் கடந்து செல்லுதல்
அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல்,
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா, 220
வழும்பு கண் புதைத்த நுண் நீர்ப் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய;
முழு நெறி பிணங்கிய நுண் கோல் வேரலொடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின்
காரி உண்டிக் கடவுளைத் தொழுதல்
உயர் நிலை மாக் கல், புகர் முகம் புதைய, 225
மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங் கணை,
தாரொடு பொலிந்த, வினை நவில் யானைச்
சூழியின் பொலிந்த, சுடர்ப் பூ இலஞ்சி,
ஓர் யாற்று இயவின், மூத்த புரிசைப்
பராவு அரு மரபின் கடவுள் காணின், 230
தொழா நிர் கழியின் அல்லது, வறிது.
நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி
மாரி தலையும், அவன் மல்லல் வெற்பே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.