எருமை அன்ன கருங் கல் இடை தோறு,
|
|
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
|
|
கானக நாடனை! நீயோ, பெரும!
|
|
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
|
|
5
|
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
|
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
|
|
குழவி கொள்பவரின், ஓம்புமதி!
|
|
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே.
|
திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
| |
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட
ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு
பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.