நிலா முற்றங்களிலிருந்து சேவிக்கும் மகளிர்
நாள் மகிழ் இருக்கை காண்மார், பூணொடு
தெள் அரிப் பொன் சிலம்பு ஒலிப்ப, ஒள் அழல்
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை, 445
அணங்கு வீழ்வு அன்ன, பூந் தொடி மகளிர்,
மணம் கமழ் நாற்றம் தெரு உடன் கமழ,
ஒண் குழை திகழும் ஒளி கெழு திரு முகம்
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்,
தெண் கடல் திரையின், அசைவளி புடைப்ப, 450
நிரை நிலை மாடத்து அரமியம்தோறும்,
மழை மாய் மதியின், தோன்றுபு மறைய
கோயில்களில் அந்தி விழா
நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக, 455
மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ் சுடர்
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவின், உரு கெழு பெரியோர்க்கு,
மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்,
அந்தி விழவில் தூரியம் கறங்க 460
பெளத்தப் பள்ளி
ஓம்பினர்த் தழீஇ, தாம் புணர்ந்து முயங்கி,
தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு,
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேர் இளம் பெண்டிர், 465
பூவினர், புகையினர், தொழுவனர், பழிச்சிச்
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்
அந்தணர் பள்ளி
சிறந்த வேதம் விளங்கப் பாடி,
விழுச் சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து,
நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி, 470
உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின்,
பெரியோர் மேஎய், இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்
சமணப் பள்ளி
வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் 475
பூவும் புகையும் சாவகர் பழிச்ச,
சென்ற காலமும், வரூஉம் அமயமும்,
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து,
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்,
சான்ற கொள்கை, சாயா யாக்கை, 480
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர், நோன்மார்,
கல் பொளிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்
பல் புரிச் சிமிலி நாற்றி, நல்கு வர,
கயம் கண்டன்ன வயங்குடை நகரத்து,
செம்பு இயன்றன்ன செஞ் சுவர் புனைந்து, 485
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து, ஓங்கி,
இறும்பூது சான்ற நறும் பூஞ் சேக்கையும்
குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.