ஊருக்குச் செல்லப் பரிசிலன் விரும்புதல்
ஒரு நாள்,
'செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய 120
செல்வ! சேறும், எம் தொல் பதிப் பெயர்ந்து' என.
மெல்லெனக் கிளந்தனம் ஆக,
அரசன் பிரிய மனமின்றிப் பரிசு வழங்கி அனுப்புதல்
'வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு?' என,
சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு,
'துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு 125
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க!' என,
தன் அறி அளவையின் தரத்தர, யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு,
இன்மை தீர வந்தனென்.
கரிகால் வளவனது சிறப்புக்கள்
வென் வேல்
உருவப் பல் தேர் இளையோன் சிறுவன், 130
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி, 135
வெவ் வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.