கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 18 ஜனவரி, 2012

தமிழ்மொழியின் தொன்மை

உலகில் இன்று ஏறத்தாழ 3000 மொழிகள் உள்ளன. 
இவற்றுள் எழுத்து வடிவம் கொண்டன 250 
அளவினவே. இன்று அறியப்படும் மொழிகளுள் 
விரல்விட்டு எண்ணத் தக்க சிலவே காலப் 
பழமையும் இலக்கிய வளமையும் உடையன. 
அவை உயர்தனிச்செம்மொழிகள் என்று பாராட்ட
ப்படுகின்றன. அவற்றுள்ஒன்றாகத் தமிழ் ஏற்றுக் 
கொள்ளப்பட்டுள்ளது. ஏனையவை வடமொழி, 
கிரீக்கு, இலத்தீன், ஈபுரு, சீனம் ஆகியனவாகும்.
இவற்றுள் ஈபுரு, வடமொழி, இலத்தீன் ஆகியவை 
வழக்கு ஒழிந்துவிட்டன. எத்தனையோ மொழிகள் 
உருச்சிதைந்து அடையாளம்காணமுடியாமல் 
ஆகிவிட்ட நிலையிலும், பழைமைக்குப் பழைமை
யானதாயும், புதுமைக்குப் புதுமையானதாகவும் தமிழ்
விளங்குகிறது. இன்று பேச்சு வழக்கிலுள்ள உலக
மொழிகளில்தமிழே முதன்மையானது என்று 
இந்தியக் கலைக் களஞ்சியம்மொழிகிறது. திருத்
தந்தை சேவியர் தனிநாயகம் அவர்கள் தமிழின் 
கன்னித்தன்மையைப் பாராட்டி, “தமிழ் கிரேக்கம்,
இலத்தீன், வடமொழி ஆகியன போல் ஓர் உயர்தனிச்
செம்மொழியாக விளங்குகிறது. ஆனால் தன்னை 
யொத்த பலமொழிகள் உருத்தெரியாமல் மறைந்
தொழியவும், தமிழ் இன்றும்பேச்சுமொழியாக நிலை
பெற்றுள்ளது. ஒரு பழைமையானஉயர்தனிச் 
செம்மொழி இன்றளவும் இளமையோடுநிலை
பெற்றிருத்தலுக்குத் தமிழே ஒரே சான்றாக 
விளங்குகிறது”என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;