கடவுள் வாழ்த்து
8 | நாடும் மநாடா ளரசுந்நக ருந்நகர்சூழ் காடுங் கடவுள் புகனீக்குதல் கார ணம்மாத் தேடுஞ் சிறுபேய் பெரும்பேய்த்தியைச் சென்று பற்றும் பாடும் மவடான் பகைகொண்டுபல் கால்வெ ருட்டி. |
9 | தான்கண்ட வன்செய் தவந்தன்னைக் கலக்க கில்லா மான்கொண்ட நோக்கின் னவளாய்மற மாற்றி யபின் னூன்கொண்ட காட்சி முதலாக வுடைத்த தெல்லாம் யான்கண்ட வாறே யுரைப்பன்னவை யார்க் கிதனை. |
தர்ம உரை
10 | மாஞ்சோலை பொங்கி மருதங்கிளிப் பிள்ளை கள்வாய்த் தீஞ்சா றொழுகுந் திணையின்னணி தங்கி யேங்குந் தாஞ்சால வாழ்நா டளிரீனுந் தகைய துண்டு பாஞ்சால மென்று பலரும்புகழ் பார்த்தி நாடே. |
11 | வாடா வளத்தான் மலர்ஞால மதிப்பின் மிக்க நாடாவ தி·தா மதனன்னலஞ் சொன்ன லத்தாற் கூடா தெனினுஞ் சிலகூறலும் வேண்டு மன்றே பாடா விருந்தார் பரிவஞ்சும் படிய தன்றே. |
12 | வருபுனலன வளவயலிடை மறிவனவின வாளை மருவினியன மகிழ்தகையன மலர்சிறையன நாரை கருவரியன கடுநடையன கனைகுரலன கம்புள் திருவுருவின தெரிகதிரின திசைதிசைதொறு செந்நெல். |
13 | பணைநிலையன கமுகொடுபடு பழமுதிர்வன தெங்க மிணைநிலையன சுளைகனியிவை யினியனபல வாழை மணனயர்வன மனையயலன மதுவிரிமணி நீலந் திணிநிலையன திரளரையன தெரிமலரன மருதம். |
14 | கரைதழுவிய கழிமடலின கடிகமழ்வன கைதை புரைதழுவிய பொதியவிழ்வன பொன்மலர்வன புன்னை விரைதழுவிய விழைதகையன வெறிமலர்விரி ஞாழல் நிரைதழுவிய நெறிகழியிடை நிகரலரன நெய்தல். |
15 | குருவுடையன கொடிமிடைவொடு குலைவிரிவன கோடல் தருசுடரன தளவயலின தகைமலரன தோன்றி யருகுடையன வணியுருவின வயலனவலர் காயா முருகுடையன முகைவிரிவன முறியலர்வன முல்லை. |
16 | நனைசினையன நகுவிரையன நலனுடையன நாகம் வினையுடையன பொழுதிவையென விரிவனகணி வேங்கை கனைசுடர்விடு கதிர்மணியறை களனயர்வன காந்த ளினியனபல சுனையயலன விறுவிரையன குறிஞ்சி. |
17 | ஆடலொடு பாடலவை தாமறுத லின்றிக் கேடில்புக ழாரவைகள் கண்டுமிசை கேட்டு மூடலொடு கூடலுணர் வார்கள்புணர் வாராய்ச் சேடரொடு சேடியருஞ் செல்வமிக நல்கி. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.