ஏறியானை யிருங்கலைக ணேர்ந்தா ரவையிவையென் றூறங்கி யுருவுருசெய் தாலுமுவந் தொழிபவான் மாறுகோ ளிலைமண்ணான் மறியுருசெய் தீந்தக்காற் பாறினீர்க் கும்மவர்க்கும் பழிபாவ மொன்றிலையே |
39 | கொன்ற வன்னே கொடியனென வுலகங் கூறு மதனாலு மொன்ற நூலா ருரைகளோ டொப்ப முடியு மதனாலு மின்றி னின்று மிதுவொழிதி ராயி னுங்கட் கிருமைக்கு நன்றி தென்றான் வெந்நரகம் புகுதல் விலக்கு நாவினான். |
40 | கோறல் பொய்த்தல் கொடுங்களவு சேற லின்றிச் செழும்பொருண்மேற் யாறு கிற்பி னமருலக நீறு மோடு நிழன்மணியும் |
41 | ஏத்து தற்கேற் றானிரங்கி யின்ன வைசொல் லக்கேட்டுப் பாத்தி யோயெம் பழவினையும் பாறு கென்று பணிந்துதாம் யாத்து நின்ற வம்மறியும் மறமு முடனே கொண்டுபோய்க் காத்து மென்றார் கருவினையு ணீங்கு நல்ல கருத்தினார். |
42 | ஆய மெல்லா மதுசொல்லிப் போக வவணே வாழ்கின்ற பேயுங் கூடிப் பெரிதுமகி சூழ்ந்து தம்பெற் றிசொல்லி னாயு மாக்க ருத்துமில னாவ னிவனங் கட்கென்னிற் றீயு மன்னென் றேற்றகரு மையாலெனுஞ்சிந் தையிலவாய் |
43 | நிரந்து வெங்கதி ரெழுதலி னிற்றலை யிலதாய்க் கரந்த காரிருள் போற்கணங் காண்டலுக் கரிதாய்ப் பரந்த நாம்பல நாடுகள் பாடிக ணாடி (றெண்ணி) யிரந்தோர் வன்றெய்வங் கொணர்ந்திவற் கடிதுமென் |
44 | ஆசு மிங்கிருந் தினியென்னை எழுகவென் றயல காசி நாட்டினுஞ் சேடிய நாட்டினுங் காணா தேசந் தாம்பல திரியவத் தென்றிசை நீல கேசி மாதெய்வந் தலைப்பட்டுக் கிளர்ந்தின்ன வுரைக்கும். |
45 | வலிசெய் தெம்மிடம் புகுந்தடு மடையொடு முடைசேர் பலியு மூட்டுதல் பாவமீ தெனப்பலர்க் குரைத்துக் கலிகொள் காடுதன் காற்பொடி யாகவுங் கருதா னலைசெய் தானெமை யாமுனக் கபயமென் றழுத. |
46 | அழுவ தென்செய அருந்தவம் வலித்தவ னிருந்து பொழுது போக்குதல் புரிந்தனன் பொருத்தம· துடைத்தே கழுகு தாமுணக் காட்டுவ னெனக்கைகள் புடையா வெழுக வென்றுசென் றிடுபிணப் பறந்தலை யிருந்தாள். |
47 | இருட்டி ருட்டென நடந்துசென் றெழுந்தெழுந் திருக்கும் வெருட்ட லன்னினை விழுங்குவ னெனத்தன்னை வியக்கு மருட்டி றம்மில னறியினி யருவரை நெடுங்கோட் டுருட்டு வேனென வுயர்தவத் தவன்முன்னை யுரைக்கும். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.