கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 26 மார்ச், 2012

நீலகேசி-16

ஏறியானை யிருங்கலைக ணேர்ந்தா ரவையிவையென்
றூறங்கி யுருவுருசெய் தாலுமுவந் தொழிபவான்
மாறுகோ ளிலைமண்ணான் மறியுருசெய் தீந்தக்காற்
பாறினீர்க் கும்மவர்க்கும் பழிபாவ மொன்றிலையே


39கொன்ற வன்னே கொடியனென வுலகங் கூறு மதனாலு
மொன்ற நூலா ருரைகளோ டொப்ப முடியு மதனாலு
மின்றி னின்று மிதுவொழிதி ராயி னுங்கட் கிருமைக்கு
நன்றி தென்றான் வெந்நரகம் புகுதல் விலக்கு நாவினான்.


40கோறல் பொய்த்தல் கொடுங்களவு
நீக்கிப் பிறர்ம னைகண்மேற்
சேற லின்றிச் செழும்பொருண்மேற்
சென்ற சிந்தை வேட்கையினை
யாறு கிற்பி னமருலக
நுங்கட் கடிய தாbமன்றான்
நீறு மோடு நிழன்மணியும்
பொன்னு நிகரா நோக்குவான்.


41ஏத்து தற்கேற் றானிரங்கி யின்ன வைசொல் லக்கேட்டுப்
பாத்தி யோயெம் பழவினையும் பாறு கென்று பணிந்துதாம்
யாத்து நின்ற வம்மறியும் மறமு முடனே கொண்டுபோய்க்
காத்து மென்றார் கருவினையு ணீங்கு நல்ல கருத்தினார்.


42ஆய மெல்லா மதுசொல்லிப் போக வவணே வாழ்கின்ற
பேயுங் கூடிப் பெரிதுமகி சூழ்ந்து தம்பெற் றிசொல்லி
னாயு மாக்க ருத்துமில னாவ னிவனங் கட்கென்னிற்
றீயு மன்னென் றேற்றகரு மையாலெனுஞ்சிந் தையிலவாய்


43நிரந்து வெங்கதி ரெழுதலி னிற்றலை யிலதாய்க்
கரந்த காரிருள் போற்கணங் காண்டலுக் கரிதாய்ப்
பரந்த நாம்பல நாடுகள் பாடிக ணாடி (றெண்ணி)
யிரந்தோர் வன்றெய்வங் கொணர்ந்திவற் கடிதுமென்


44ஆசு மிங்கிருந் தினியென்னை எழுகவென் றயல
காசி நாட்டினுஞ் சேடிய நாட்டினுங் காணா
தேசந் தாம்பல திரியவத் தென்றிசை நீல
கேசி மாதெய்வந் தலைப்பட்டுக் கிளர்ந்தின்ன வுரைக்கும்.


45வலிசெய் தெம்மிடம் புகுந்தடு மடையொடு முடைசேர்
பலியு மூட்டுதல் பாவமீ தெனப்பலர்க் குரைத்துக்
கலிகொள் காடுதன் காற்பொடி யாகவுங் கருதா
னலைசெய் தானெமை யாமுனக் கபயமென் றழுத.


46அழுவ தென்செய அருந்தவம் வலித்தவ னிருந்து
பொழுது போக்குதல் புரிந்தனன் பொருத்தம· துடைத்தே
கழுகு தாமுணக் காட்டுவ னெனக்கைகள் புடையா
வெழுக வென்றுசென் றிடுபிணப் பறந்தலை யிருந்தாள்.


47இருட்டி ருட்டென நடந்துசென் றெழுந்தெழுந் திருக்கும்
வெருட்ட லன்னினை விழுங்குவ னெனத்தன்னை வியக்கு
மருட்டி றம்மில னறியினி யருவரை நெடுங்கோட்
டுருட்டு வேனென வுயர்தவத் தவன்முன்னை யுரைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;