நரவாகனனை வித்தியாதரன் காணுதல்
நெடுங்க ரைமிசை நீர்மையினின்றனன் நடுங்க லின்றிவாய் நானநீர் பூசியே கடிகமழ் கண்ணிக் காளை யிருந்தனன் அடிகண் டோ ர்மகனன்பிற் றொழுதனன் | 276 |
நரவாகனன் வினாவும் வித்தியாதரன் விடையும்
அண்ணல் கண்டுநீ யாருரை யென்றாலும் தண்ணென் வாய்மொழித் தானவன் சொல்லுவான் அண்ணல் கேட்க வரிய வரைமிசைக் கண்ணொளிர்கொடிக் கந்தரு வப்புரம். | 277 |
காவலன்னீல வேகற்குக் காரிகை நாவி ளங்குஞ்சீர் நாகதத் தையெனும் பூவிளங்கொடி புத்திரி நாமமும் மேவி ளங்சூமநங்கவி லாசனை. | 278 |
சுரும்பார் மாலையளித் துயிலிடைக் கரும்பார் நன்மொழி காதற் கனவிடை விரும்பு சிங்கமீன் வீரியச் சாபந்தான் பரம்பு மண்ணின்று பாங்கினெழுந்ததே. | 279 |
வரைமி சைவந்து மன்னிய தன்முலை அரிய முத்தணி யாரத்தைக் கவ்வியே விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும் அரிவை கண்டுதன்னையர்க் குரைத்தனள் | 280 |
வெல்ல ரும்வேலின் வேந்தனுங் கேட்டுடன் சொல்ல ருந்தவச் சுமித்திர நன்முனி புல்ல ரும்பதம் பொற்பினிறைஞ்சினன் நல்ல ருந்தவனற்கனாக் கேட்டனன். | 281 |
அறிந்த ருள்செய் தனனம் முனிவனும் செறிந்த பூமிவாழ் திருமரு கன்வரும் அறைந்த நின்மகட் காகு மணவரன் நிறைந்த நேமியிந் நிலமு மாளுவன். | 282 |
அம்முனிவன்சொலரசன் கேட்டுடன் தம்மி லெண்ணினன் சார்ந்து காண்கெனச் செம்மை யெண்ணியே செப்பி விட்டனன் உம்மைக் கண்டனன் செல்க வென்றனன். | 283 |
நரவாகனனை நீலவேகன் வரவேற்றல்
போவதே பொருள் புண்ணியற்கொண்டு தேவனேயெனச் செல்வனுஞ்செலும் காவலன்னெதிர் கண்டு கண்மகிழ் ஏவலாளரோடினிதினெய்தினான். | 284 |
நீலவேகனின் ஆசை
கன்னல் விற்கணையில்லாக் காமனை இன்னி லக்கண மேற்ற காளையை மன்னனின்னுரை மகிழ்ந்து கூறினான் பின்ன மைச்சரைப் பேணிக் கேட்டனன். | 285 |
அநங்க விலாசனை சுயம்வரம்
தனித்தி வர்மணந் தரத்தி யற்றினால் சினத்தொ டுமன்னர் சேர்வ ராலென மனத்த மைச்சரு மகிழ்ந்து மன்னரை இனத்தொர் மாவர மியம்பி விட்டனர். | 286 |
அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலையிடல்
மன்ன ரீண்டியே வந்திருக்கையில் அன்ன மென்னடை யமிர்த மன்னவள் மின்னின் மாலையை விரகினேந்திமுன் சொன்ன காளைமேற் சூட்டி நின்றனள். | 287 |
மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்
அரசன் மிக்குநன் கமைத்த வேள்வியின் திருமணஞ் செய்து செல்வனின்புற இருவரும்புணர்ந்தின்ப மார்ந்தனர் வெருவு மானச வேகன் றன்மனம் 288 |
நரவாகனனின் திருவுலா
வேக யானைமே லேறி வீரனும் நாக நீள்புர நடுவிற் றோன்றலும் காமனேயெனக் கன்னி மங்கையர் தாமரைக்கணாற் றான்ப ருகுநாள். | 289 |
நரவாகனின் சிறப்புகள்
நேமி யாளவே நினைத்த தோன்றலும் வாம நாகர் தம் மலையிற் சென்றனன் தாம மார்பனைத் தரத்திற் கண்டவர் நேமி தான்முதனிதிக ளொன்பதும் 290 |
நாம விந்திரனன்க ருள்செயக் காமனுக்கீந்து கண்டு சேவித்துத் தாம வந்தரர் தாம்ப ணிந்திடத் தோமனாலிரண் டொன்ற வாயிரம். | 291 |
நரவாகனனை சக்கரப் படை வணங்குதல்
சக்க ரம்வலஞ் சார்ந்தி றைஞ்சின மிக்க புண்ணியன் மீட்டு வந்துடன் தக்க விஞ்சையர் தம்ப தியெல்லாம் அக்கணத்தினி லடிப்ப டுத்தினன். | 292 |
நரவாகனனின் வெற்றி
விஞ்சை யர்திறை வெற்றி கொண்டவன் தஞ்ச மென்றவர் தரத்தின் வீசியே எஞ்ச லில்புரமிந்திரன்னென மிஞ்சு மாளிகை வீரன் சென்றனன். | 293 |
நரவாகனனின் மாட்சி
மதன மஞ்சிகை மனங்குளிர்ந்திட விதன மின்றிநல்வேக வதியுடன் அதிக போக வநங்க விலாசனை அதிக வெண்ணா யிரமான தேவியர் | 294 |
இனிய வேள்வியா லின்ப மார்ந்துபின் இனிய புண்ணிய மீண்டி மேல்வரத் தனிய ரசினைத் தானி யற்றியே நனிய தொன்றினன்னாம வேலினான். | 295 |
நரவாகனன் தந்தையைக் காண வருதல்
விஞ்சை யர்தொழ வீறுந் தேவியர் பஞ்சின் மெல்லடிப் பாவை மாருடன் மஞ்சு சூழ்மலை விட்டு வானவர் தஞ்ச மானதன் தந்தை பாற்சென்றான். | 296 |
புரம திக்கப்பூ மாலை தோரணம் வரம்பினாற்றியே வான்கொ டிம்மிடை அரும்பு மாலைவே லரசன் சென்றெதிர் விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன். | 297 |
நரவாகனன் தாய் தந்தையரை வணங்குதல்
தந்தை தாய்பதந் தான்ப ணிந்தபின் இந்து வாணுத லெழின்ம டந்தையர் வந்து மாமனை வணங்கி மாமியை அந்த மில்வனத் தடியி றைஞ்சினார். | 298 |
உதயணன் செயல்
மகிழ்ந்து புல்லியே மனைபு குந்தபின் நெகிழ்ந் தகாதலானேமிச் செல்வனும் மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன் மகிழ்ந்து மைந்தரை வரவ ழைத்தனன். | 299 |
பதுமாவதியின் மைந்தன் கோமுகனுக்கு முடிசூட்டல்
பதுமை தான்மிகப் பயந்த நம்பியாம் கொதிநுனைவேலின் கோமு கன்றனை இதம ளித்திடு மிளவ ரைசென அதுல நேமியனரசு நாட்டினான். | 300 |
நரவாகனன் வித்தியாதர உலகம் செல்லல்
தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற் றந்த தான்பிரி தலைக்க ருத்தெணி வெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும் இந்திரன்றானூ ரியல்பினேகினான். | 301 |
செல்வநற் குமரன் சென்று தெய்வவிந் திரனைக் கண்டு செல்வநல் வாமன் பூசைச் சீர்கண்டு வணக்கஞ் செய்து செல்வவிந் திரனனுப்பத் திருமணித் தேரினேறிச் செல்வமார் புரம்பு குந்து சிறப்பினோ டிருந்தானன்றே. | 302 |
துறவுக் காண்டம்
உதயணனின் தவ எண்ணம்
வளங்கெழு வத்தவற்கு மன்னிய காதன் மிக்க உளங்கெழு கற்பினார்களோதிமம் போலு நீரார் இளங்கிளி மொழியினார்க ளினிமையினால்வரோடும் துளங்கலி றிருமின் போர்மின் தூயசொன் மடந்தை தாமும். | 303 |
மண்ணியன் மடந்தை யோடு மருவினார் மிக்க மன்னன் புண்ணிய முன்னாட் செய்த போதந்தே யுதவி செய்ய எண்ணிய கரும மெல்லா மியைபுடனாகப் பின்னும் புண்ணிய நோன்பு நோற்கப் பொருந்திய மனத்தனானான். | 304 |
உதயணன் தவத்தின் பெருமையை எண்ணுதல்
ஆசை யென்றனக் கருளும் தோழனா ஓசை வண்புகழ் யூகி யானதும் வாச வதத்தை மனைவி யானதும் பேச ரும்மகப் பெற்றெடுத்ததும். | 305 |
நரவாகனன்மக னாம மானதும் வரைமிசைத் தானவர் வாழு நாட்டையங் கரண நேமியா லடிப்ப டுத்ததும் பொருவில் வேந்தர்கள் புகழ்ந்த டைந்ததும் | 306 |
மிக்க விந்திரன் மேவி விட்டதும் தக்க புத்திரன் றரத்திற் சென்றதும் தொக்க வானவர் தொல்சி றப்புடன் அக்கணம்விட வண்ணல் போந்ததும். | 307 |
போந்து புண்ணியன் பொருவில் போகத்துச் சேந்தி ருந்ததுஞ் செய்த வத்தெனா வேந்தனெண்ணியை வெறுத்து மாதரைக் காந்தி வாமனைக் கண்டடி தொழும் | 308 |
உதயணனை மகளிர் மயக்குதல்
எண்ணம் வந்துநல் லெழிற்பெ ரும்மகன் புண்ணி யநோன்பு போந்த வேளைவேற் கண்ணின் மாதர்கள் காவ லன்மனம் உண்ணக் காமத்தை யுருவு காட்டினார். | 309 |
உதயணன் மீண்டும் காமத்தில் திளைத்தல்
மன்னு மன்பினீண் மாதர் மோகத்திற் றுன்னு மால் கடற் றோன்றனீந்துநாட் சொன்ன மும்மதந் தோன்ற வேழமும் உன்னிக் காற்றளை யுதறி விட்டதே. | 310 |
மதவெறி கொண்ட யானை
காய்ந்து வெம்மையிற் காலன் போலவே பாய்ந்து பாகரைப் பலசனங்களைத் தேய்த்துக் காலினேர் தீயுமிழ்வபோல் ஆய்ந்த கண்களு மருவ ரையென. | 311 |
வெடிப டும்முழக் கிடியெனவிடும் கொடியு டைமதில் கிடுகி டென்றிடும் விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப் படப டென்னவே பயண மானதே. | 312 |
நகர மாந்தர் செயல்
அடிய டிய்யென வாயு தர்செலப் படுவ டுவ்வெனப் பறைகள் கொட்டிடத் திடுதி டென்றொலி தெறித்த பேரிகை நடுந டுங்கினார் நகர மாந்தரே. | 313 |
களிற்றின் வெறிச்செயல்
பிடிசில் பாகரைப் பிளந்தெ றிந்திடக் குடரின் மாலைகள் கோட்ட ணிந்துடன் கடவுள் யானையைக் காலிற் றேய்த்திட இடர்ப டுங்களி றெய்தி யோடுமே. | 314 |
நகரமாந்தர் அரசனுக்கு செய்தி தெரிவித்தல்
நகர மாந்தர்க ணடுங்கிச் சென்றுநற் சிகரம் போன்முடிச் சீர ரசற்குப் பகர வாரணம் பலரைக் கொன்றதென் சிகர மாடநீர் சேர்த்தி ருக்கென்றான். | 315 |
யானை, சோலை முதலிய அனைத்தையும் அழித்தல்
நீல நற்கிரி நெடிய யானையும் மாலை நற்போது மாய்ந்து பின்னுறக் காலை நற்போதாற் கனன்று தோன்றின சோலை நல்வய றுகைத்த ழித்ததே. | 316 |
வழிவ ருவாரை மார்கி ழித்திடும் எழில்வனம்பொய்கையீட ழித்திடும் இழிவு றுந்தொழி லீண்டிச் செய்யுநாட் பொழிலுண் மாதவர் பொருந்தினார்களே. | 317 |
சாரணர் சார்ந்திருந்த பொழில்
வேத நான்கையும் விரித்த ருளுவர் மாத வர்வினை மாயச் செய்குவார் ஏதில யாத்திரைக் கெழுந்து வந்தந்தப் போத விழ்பொழில் புகுந்தி ருந்தனர். | 318 |
சாரணரின் பெருமை
இனமலர் மிசை யேகு வார்களும் புனல லைமிசைப் போகு வார்களும் கனிகள் காய்மிசை காணுஞ் சாரணர் இனிய நூன்மிசை யிசைந்து செல்வரும் | 319 |
மலைத்த லைமிசை வானிற் செல்வரும் நிலத்தினால்விரனீங்கிச் செல்வரும் தலத்தினன்முழந் தரத்திற் செல்வரும் பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும் | 320 |
மலைமு ழஞ்சுண் மன்னினான்முடி உலகெ லாமவ ரொருங்கி டம்விடும் அலம தீரவே வறம ழைபெய்யும் மலமறுந்தர மாமுனிவரும். | 321 |
பக்க நோன்புடைப் பரம மாமுனி மிக்க பாணிமீ தடிசின் மேதினி புக்கு முண்டிடப் போது வார்பகல் தக்க வர்குணஞ் சாற்றரி தென்றே | 322 |
தருமவீரர் அறம் கூறுதல்
தரும வீரரென்றவருட் டலைவன்பால் வெருவ ருந்துன்ப விலங்கும் வாழ்க்கையை மருவி யோதவே வந்த யாவரும் திருமொழியினைத் திறத்திற் கேட்டனர் | 323 |
யானையின் செயல்
வருந்த சைநசை வானிற் புள்ளுகள் இரைந்து மேலுங்கீ ழினும்ப டர்ந்திடப் பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும் விருந்த வையுண விட்ட தியானையே. | 324 |
யானை சாரணர் மூலம் பழம் பிறப்புணர்தல்
கூற்றெழுங்கரி கொதித்தெ ழுந்ததால் ஆற்றலம்முனியறவு ரையுற ஏற்ற ருஞ்செவி யிறைஞ்சித் தன்னுடை மாற்ற ரும்பவ மறிந்து ணர்ந்ததே. | 325 |
யானையின் வருத்தம்
குருதியாறிடக் கொன்ற தீவினை வெருவு துக்கமும் விளங்கினுய்த்திடும் அருந ரகினு ளாழ்ந்து விட்டிடும் பெருந்து யரெனப் பேது றுக்குமே. | 326 |
யானை மெய்யுணர்வு பெற்று அமைதியுறல்
நெஞ்சு நொந்தெழு நெடுங்க ணீருகும் அஞ்சு மாவினுக் கறிவு தோன்றிடக் குஞ்ச ரம்மினிக் கோன கருன்னி இஞ்சி வாய்தலினெய்தி நின்றதே. | 327 |
களிற்றினைக் காண உதயணன் வருதல்
கடையுடைக் காவலாளர் கதவினைத் திறக்கப் போந்தே நடுநகர் வீதி சென்று நரபதி மனையைச் சேர்ந்து நெடுவரை போல நின்ற நீர்மையை வாயி லாளர் முடிமனற் குரைப்ப முன்னிப் பெருமகனெழுந்து வந்தான். | 328 |
உதயணன் களிற்றின் மீது ஏறல்
திருமுடி மன்னனின்ற திருநிறை யானை கண்டு மருவிய வமைச்சர் தம்மை மன்னவனினிதினோக்கப் பெருவிறல் யூகி சொல்வான் பெருந்தவர் பால றத்தை மருவியே கேட்ட தாகு மன்னநீ யேற வென்றான். | 329 |
யானை உதயணனை முனிவரிடம் கொண்டு செல்லல்
வேந்தனுங் கேட்டு வந்து வெண்கோட்டினடிவைத் தேறிச் சேந்தனனெருத்தின் மீதிற் றிரும்பிக்கொண்டேகி வேழம் பூந்தளிர் நிறைந்தி லங்கும் பொழில் வலஞ் சுற்ற வந்து காந்துநன் மணிப்பூண் மார்பன் கைம்மாவிட் டிழிந்தானன்றே. | 330 |
உதயணன் துறவியிடம் அறங்கேட்டல்
விரைகமழ் பூவு நீரும் வேண்டிய பலமு மேந்திப் பரிசனஞ் சூழச் சென்று பார்த்திபனினியனாகி மருமலர் கொண்டு வாழ்த்தி மாதவ ரடியி றைஞ்ச இருவென விருக்கை காட்ட விருந்துநல் லறத்தைக் கேட்டான். | 331 |
முனிவர் கூறிய அறவுரைகள்
அறத்திற முனிவன் சொல்ல வரசனுங் கேட்க லுற்றான் பெறற்கரு மருங்க லங்கள் பேணுதற் கரிய வாகும் திறத்தறி பொருள்க ளாறுந் தேர்ந்துபஞ் சத்தி காயம் மறித்தறி தத்து வங்கள் வரிசையினேழ தாமே. | 332 |
சீரிய நவப தங்கள் செப்பிய காய மாறும் வீரியப் பொறிக ளாறும் வேண்டிய வடக்க மாகும் ஓரிய லறம்பத் தோடு மொருங்குபன்னிரண்டு சிந்தை ஆரிய ரறிந்து நம்பி யதன்வழி றொமுக்க மாகும். | 333 |
தலைமகார் சிறப்புச் செய்து தன்மைநல் வாய்மை யான கலையினற் கரைறைக் கண்டு காதனூல் வழியைச் சென்று மலைவில்சீர் மா தவர்க்கு வண்மையிற் றானஞ் செய்தார் தொலைவிலாய் பிறவி நீங்கித் தொல்சுகக் கடலுளாழ்வார். | 334 |
தரும வீரர் தரும முறைத்திடப் பெருமை மன்னனும் பேர்ந்து வனங்கினன் மருவு வல்வினை மாசினுதிர்த்திடத் தெரிசனவ்விளக் கஞ்சிறப் பானதே. | 335 |
முனிவர் களிற்றின் வரலாறு கூறல்
காது வேன்மன்னன் களிறு கதமெழற் கேது வென்னென யெதிவ ரன்சொலும் தாது பூம்பொழிற் சாலிநன்னாட்டிடை வேதியர் குழு வாய்விளங் கும்புரம். | 336 |
கடக மென்பதூர் காதற் பிராமணன் விடப கன்னென்னும் பேரினன் மற்றவன் இடைமின் றேவியுஞ் சானகி யென்பவள் கடையில் காமங் கலந்துடன் செல்லுநாள். | 337 |
அமரி யென்னு மணிமுலை வேசிதன் அமையுங் காமத் தழுங்கி விழுந்தவன் சமைய வேள்வியுஞ் சார்ந்த வொழுக்கமும் அமைவி லன்பவ மஞ்சினனில்லையே. | 338 |
காமங் கள்ளுண்டு கைவிட லின்றியே தாம நற்குழ லாடுணை யாகவும் யாம மும்பக லும்மறி யாதவன் ஆமர ணத்தன்பினானைய தாயினன். | 339 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.