கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 26 மார்ச், 2012

உதயண குமார காவியம், -16

நரவாகனனை வித்தியாதரன் காணுதல்


நெடுங்க ரைமிசை நீர்மையினின்றனன்
நடுங்க லின்றிவாய் நானநீர் பூசியே
கடிகமழ் கண்ணிக் காளை யிருந்தனன்
அடிகண் டோ ர்மகனன்பிற் றொழுதனன்
276


நரவாகனன் வினாவும் வித்தியாதரன் விடையும்


அண்ணல் கண்டுநீ யாருரை யென்றாலும்
தண்ணென் வாய்மொழித் தானவன் சொல்லுவான்
அண்ணல் கேட்க வரிய வரைமிசைக்
கண்ணொளிர்கொடிக் கந்தரு வப்புரம்.
277


காவலன்னீல வேகற்குக் காரிகை
நாவி ளங்குஞ்சீர் நாகதத் தையெனும்
பூவிளங்கொடி புத்திரி நாமமும்
மேவி ளங்சூமநங்கவி லாசனை.
278


சுரும்பார் மாலையளித் துயிலிடைக்
கரும்பார் நன்மொழி காதற் கனவிடை
விரும்பு சிங்கமீன் வீரியச் சாபந்தான்
பரம்பு மண்ணின்று பாங்கினெழுந்ததே.
279


வரைமி சைவந்து மன்னிய தன்முலை
அரிய முத்தணி யாரத்தைக் கவ்வியே
விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும்
அரிவை கண்டுதன்னையர்க் குரைத்தனள்
280


வெல்ல ரும்வேலின் வேந்தனுங் கேட்டுடன்
சொல்ல ருந்தவச் சுமித்திர நன்முனி
புல்ல ரும்பதம் பொற்பினிறைஞ்சினன்
நல்ல ருந்தவனற்கனாக் கேட்டனன்.
281


அறிந்த ருள்செய் தனனம் முனிவனும்
செறிந்த பூமிவாழ் திருமரு கன்வரும்
அறைந்த நின்மகட் காகு மணவரன்
நிறைந்த நேமியிந் நிலமு மாளுவன்.
282


அம்முனிவன்சொலரசன் கேட்டுடன்
தம்மி லெண்ணினன் சார்ந்து காண்கெனச்
செம்மை யெண்ணியே செப்பி விட்டனன்
உம்மைக் கண்டனன் செல்க வென்றனன்.
283


நரவாகனனை நீலவேகன் வரவேற்றல்


போவதே பொருள் புண்ணியற்கொண்டு
தேவனேயெனச் செல்வனுஞ்செலும்
காவலன்னெதிர் கண்டு கண்மகிழ்
ஏவலாளரோடினிதினெய்தினான்.
284


நீலவேகனின் ஆசை


கன்னல் விற்கணையில்லாக் காமனை
இன்னி லக்கண மேற்ற காளையை
மன்னனின்னுரை மகிழ்ந்து கூறினான்
பின்ன மைச்சரைப் பேணிக் கேட்டனன்.
285


அநங்க விலாசனை சுயம்வரம்


தனித்தி வர்மணந் தரத்தி யற்றினால்
சினத்தொ டுமன்னர் சேர்வ ராலென
மனத்த மைச்சரு மகிழ்ந்து மன்னரை
இனத்தொர் மாவர மியம்பி விட்டனர்.
286


அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலையிடல்


மன்ன ரீண்டியே வந்திருக்கையில்
அன்ன மென்னடை யமிர்த மன்னவள்
மின்னின் மாலையை விரகினேந்திமுன்
சொன்ன காளைமேற் சூட்டி நின்றனள்.
287


மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்


அரசன் மிக்குநன் கமைத்த வேள்வியின்
திருமணஞ் செய்து செல்வனின்புற
இருவரும்புணர்ந்தின்ப மார்ந்தனர்
வெருவு மானச வேகன் றன்மனம் 288


நரவாகனனின் திருவுலா


வேக யானைமே லேறி வீரனும்
நாக நீள்புர நடுவிற் றோன்றலும்
காமனேயெனக் கன்னி மங்கையர்
தாமரைக்கணாற் றான்ப ருகுநாள்.
289


நரவாகனின் சிறப்புகள்


நேமி யாளவே நினைத்த தோன்றலும்
வாம நாகர் தம் மலையிற் சென்றனன்
தாம மார்பனைத் தரத்திற் கண்டவர்
நேமி தான்முதனிதிக ளொன்பதும் 290


நாம விந்திரனன்க ருள்செயக்
காமனுக்கீந்து கண்டு சேவித்துத்
தாம வந்தரர் தாம்ப ணிந்திடத்
தோமனாலிரண் டொன்ற வாயிரம்.
291


நரவாகனனை சக்கரப் படை வணங்குதல்


சக்க ரம்வலஞ் சார்ந்தி றைஞ்சின
மிக்க புண்ணியன் மீட்டு வந்துடன்
தக்க விஞ்சையர் தம்ப தியெல்லாம்
அக்கணத்தினி லடிப்ப டுத்தினன்.
292


நரவாகனனின் வெற்றி


விஞ்சை யர்திறை வெற்றி கொண்டவன்
தஞ்ச மென்றவர் தரத்தின் வீசியே
எஞ்ச லில்புரமிந்திரன்னென
மிஞ்சு மாளிகை வீரன் சென்றனன்.
293


நரவாகனனின் மாட்சி


மதன மஞ்சிகை மனங்குளிர்ந்திட
விதன மின்றிநல்வேக வதியுடன்
அதிக போக வநங்க விலாசனை
அதிக வெண்ணா யிரமான தேவியர்
294


இனிய வேள்வியா லின்ப மார்ந்துபின்
இனிய புண்ணிய மீண்டி மேல்வரத்
தனிய ரசினைத் தானி யற்றியே
நனிய தொன்றினன்னாம வேலினான்.
295


நரவாகனன் தந்தையைக் காண வருதல்


விஞ்சை யர்தொழ வீறுந் தேவியர்
பஞ்சின் மெல்லடிப் பாவை மாருடன்
மஞ்சு சூழ்மலை விட்டு வானவர்
தஞ்ச மானதன் தந்தை பாற்சென்றான்.
296


புரம திக்கப்பூ மாலை தோரணம்
வரம்பினாற்றியே வான்கொ டிம்மிடை
அரும்பு மாலைவே லரசன் சென்றெதிர்
விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன்.
297


நரவாகனன் தாய் தந்தையரை வணங்குதல்


தந்தை தாய்பதந் தான்ப ணிந்தபின்
இந்து வாணுத லெழின்ம டந்தையர்
வந்து மாமனை வணங்கி மாமியை
அந்த மில்வனத் தடியி றைஞ்சினார்.
298


உதயணன் செயல்


மகிழ்ந்து புல்லியே மனைபு குந்தபின்
நெகிழ்ந் தகாதலானேமிச் செல்வனும்
மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன்
மகிழ்ந்து மைந்தரை வரவ ழைத்தனன்.
299


பதுமாவதியின் மைந்தன் கோமுகனுக்கு முடிசூட்டல்


பதுமை தான்மிகப் பயந்த நம்பியாம்
கொதிநுனைவேலின் கோமு கன்றனை
இதம ளித்திடு மிளவ ரைசென
அதுல நேமியனரசு நாட்டினான்.
300


நரவாகனன் வித்தியாதர உலகம் செல்லல்


தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற்
றந்த தான்பிரி தலைக்க ருத்தெணி
வெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும்
இந்திரன்றானூ ரியல்பினேகினான்.
301


செல்வநற் குமரன் சென்று தெய்வவிந் திரனைக் கண்டு
செல்வநல் வாமன் பூசைச் சீர்கண்டு வணக்கஞ் செய்து
செல்வவிந் திரனனுப்பத் திருமணித் தேரினேறிச்
செல்வமார் புரம்பு குந்து சிறப்பினோ டிருந்தானன்றே.
302



துறவுக் காண்டம்


உதயணனின் தவ எண்ணம்


வளங்கெழு வத்தவற்கு மன்னிய காதன் மிக்க
உளங்கெழு கற்பினார்களோதிமம் போலு நீரார்
இளங்கிளி மொழியினார்க ளினிமையினால்வரோடும்
துளங்கலி றிருமின் போர்மின் தூயசொன் மடந்தை தாமும்.
303


மண்ணியன் மடந்தை யோடு மருவினார் மிக்க மன்னன்
புண்ணிய முன்னாட் செய்த போதந்தே யுதவி செய்ய
எண்ணிய கரும மெல்லா மியைபுடனாகப் பின்னும்
புண்ணிய நோன்பு நோற்கப் பொருந்திய மனத்தனானான்.
304


உதயணன் தவத்தின் பெருமையை எண்ணுதல்


ஆசை யென்றனக் கருளும் தோழனா
ஓசை வண்புகழ் யூகி யானதும்
வாச வதத்தை மனைவி யானதும்
பேச ரும்மகப் பெற்றெடுத்ததும்.
305


நரவாகனன்மக னாம மானதும்
வரைமிசைத் தானவர் வாழு நாட்டையங்
கரண நேமியா லடிப்ப டுத்ததும்
பொருவில் வேந்தர்கள் புகழ்ந்த டைந்ததும்
306


மிக்க விந்திரன் மேவி விட்டதும்
தக்க புத்திரன் றரத்திற் சென்றதும்
தொக்க வானவர் தொல்சி றப்புடன்
அக்கணம்விட வண்ணல் போந்ததும்.
307


போந்து புண்ணியன் பொருவில் போகத்துச்
சேந்தி ருந்ததுஞ் செய்த வத்தெனா
வேந்தனெண்ணியை வெறுத்து மாதரைக்
காந்தி வாமனைக் கண்டடி தொழும்
308


உதயணனை மகளிர் மயக்குதல்


எண்ணம் வந்துநல் லெழிற்பெ ரும்மகன்
புண்ணி யநோன்பு போந்த வேளைவேற்
கண்ணின் மாதர்கள் காவ லன்மனம்
உண்ணக் காமத்தை யுருவு காட்டினார்.
309


உதயணன் மீண்டும் காமத்தில் திளைத்தல்


மன்னு மன்பினீண் மாதர் மோகத்திற்
றுன்னு மால் கடற் றோன்றனீந்துநாட்
சொன்ன மும்மதந் தோன்ற வேழமும்
உன்னிக் காற்றளை யுதறி விட்டதே.
310


மதவெறி கொண்ட யானை


காய்ந்து வெம்மையிற் காலன் போலவே
பாய்ந்து பாகரைப் பலசனங்களைத்
தேய்த்துக் காலினேர் தீயுமிழ்வபோல்
ஆய்ந்த கண்களு மருவ ரையென.
311


வெடிப டும்முழக் கிடியெனவிடும்
கொடியு டைமதில் கிடுகி டென்றிடும்
விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப்
படப டென்னவே பயண மானதே.
312


நகர மாந்தர் செயல்


அடிய டிய்யென வாயு தர்செலப்
படுவ டுவ்வெனப் பறைகள் கொட்டிடத்
திடுதி டென்றொலி தெறித்த பேரிகை
நடுந டுங்கினார் நகர மாந்தரே.
313


களிற்றின் வெறிச்செயல்


பிடிசில் பாகரைப் பிளந்தெ றிந்திடக்
குடரின் மாலைகள் கோட்ட ணிந்துடன்
கடவுள் யானையைக் காலிற் றேய்த்திட
இடர்ப டுங்களி றெய்தி யோடுமே.
314


நகரமாந்தர் அரசனுக்கு செய்தி தெரிவித்தல்


நகர மாந்தர்க ணடுங்கிச் சென்றுநற்
சிகரம் போன்முடிச் சீர ரசற்குப்
பகர வாரணம் பலரைக் கொன்றதென்
சிகர மாடநீர் சேர்த்தி ருக்கென்றான்.
315


யானை, சோலை முதலிய அனைத்தையும் அழித்தல்


நீல நற்கிரி நெடிய யானையும்
மாலை நற்போது மாய்ந்து பின்னுறக்
காலை நற்போதாற் கனன்று தோன்றின
சோலை நல்வய றுகைத்த ழித்ததே.
316


வழிவ ருவாரை மார்கி ழித்திடும்
எழில்வனம்பொய்கையீட ழித்திடும்
இழிவு றுந்தொழி லீண்டிச் செய்யுநாட்
பொழிலுண் மாதவர் பொருந்தினார்களே.
317

சாரணர் சார்ந்திருந்த பொழில்

வேத நான்கையும் விரித்த ருளுவர்
மாத வர்வினை மாயச் செய்குவார்
ஏதில யாத்திரைக் கெழுந்து வந்தந்தப்
போத விழ்பொழில் புகுந்தி ருந்தனர்.
318

சாரணரின் பெருமை

இனமலர் மிசை யேகு வார்களும்
புனல லைமிசைப் போகு வார்களும்
கனிகள் காய்மிசை காணுஞ் சாரணர்
இனிய நூன்மிசை யிசைந்து செல்வரும்
319

மலைத்த லைமிசை வானிற் செல்வரும்
நிலத்தினால்விரனீங்கிச் செல்வரும்
தலத்தினன்முழந் தரத்திற் செல்வரும்
பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும்
320

மலைமு ழஞ்சுண் மன்னினான்முடி
உலகெ லாமவ ரொருங்கி டம்விடும்
அலம தீரவே வறம ழைபெய்யும்
மலமறுந்தர மாமுனிவரும்.
321

பக்க நோன்புடைப் பரம மாமுனி
மிக்க பாணிமீ தடிசின் மேதினி
புக்கு முண்டிடப் போது வார்பகல்
தக்க வர்குணஞ் சாற்றரி தென்றே
322

தருமவீரர் அறம் கூறுதல்

தரும வீரரென்றவருட் டலைவன்பால்
வெருவ ருந்துன்ப விலங்கும் வாழ்க்கையை
மருவி யோதவே வந்த யாவரும்
திருமொழியினைத் திறத்திற் கேட்டனர்
323

யானையின் செயல்

வருந்த சைநசை வானிற் புள்ளுகள்
இரைந்து மேலுங்கீ ழினும்ப டர்ந்திடப்
பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும்
விருந்த வையுண விட்ட தியானையே.
324

யானை சாரணர் மூலம் பழம் பிறப்புணர்தல்

கூற்றெழுங்கரி கொதித்தெ ழுந்ததால்
ஆற்றலம்முனியறவு ரையுற
ஏற்ற ருஞ்செவி யிறைஞ்சித் தன்னுடை
மாற்ற ரும்பவ மறிந்து ணர்ந்ததே.
325

யானையின் வருத்தம்

குருதியாறிடக் கொன்ற தீவினை
வெருவு துக்கமும் விளங்கினுய்த்திடும்
அருந ரகினு ளாழ்ந்து விட்டிடும்
பெருந்து யரெனப் பேது றுக்குமே.
326

யானை மெய்யுணர்வு பெற்று அமைதியுறல்

நெஞ்சு நொந்தெழு நெடுங்க ணீருகும்
அஞ்சு மாவினுக் கறிவு தோன்றிடக்
குஞ்ச ரம்மினிக் கோன கருன்னி
இஞ்சி வாய்தலினெய்தி நின்றதே.
327

களிற்றினைக் காண உதயணன் வருதல்

கடையுடைக் காவலாளர் கதவினைத் திறக்கப் போந்தே
நடுநகர் வீதி சென்று நரபதி மனையைச் சேர்ந்து
நெடுவரை போல நின்ற நீர்மையை வாயி லாளர்
முடிமனற் குரைப்ப முன்னிப் பெருமகனெழுந்து வந்தான்.
328

உதயணன் களிற்றின் மீது ஏறல்

திருமுடி மன்னனின்ற திருநிறை யானை கண்டு
மருவிய வமைச்சர் தம்மை மன்னவனினிதினோக்கப்
பெருவிறல் யூகி சொல்வான் பெருந்தவர் பால றத்தை
மருவியே கேட்ட தாகு மன்னநீ யேற வென்றான்.
329

யானை உதயணனை முனிவரிடம் கொண்டு செல்லல்

வேந்தனுங் கேட்டு வந்து வெண்கோட்டினடிவைத் தேறிச்
சேந்தனனெருத்தின் மீதிற் றிரும்பிக்கொண்டேகி வேழம்
பூந்தளிர் நிறைந்தி லங்கும் பொழில் வலஞ் சுற்ற வந்து
காந்துநன் மணிப்பூண் மார்பன் கைம்மாவிட் டிழிந்தானன்றே.
330

உதயணன் துறவியிடம் அறங்கேட்டல்

விரைகமழ் பூவு நீரும் வேண்டிய பலமு மேந்திப்
பரிசனஞ் சூழச் சென்று பார்த்திபனினியனாகி
மருமலர் கொண்டு வாழ்த்தி மாதவ ரடியி றைஞ்ச
இருவென விருக்கை காட்ட விருந்துநல் லறத்தைக் கேட்டான்.
331

முனிவர் கூறிய அறவுரைகள்

அறத்திற முனிவன் சொல்ல வரசனுங் கேட்க லுற்றான்
பெறற்கரு மருங்க லங்கள் பேணுதற் கரிய வாகும்
திறத்தறி பொருள்க ளாறுந் தேர்ந்துபஞ் சத்தி காயம்
மறித்தறி தத்து வங்கள் வரிசையினேழ தாமே.
332

சீரிய நவப தங்கள் செப்பிய காய மாறும்
வீரியப் பொறிக ளாறும் வேண்டிய வடக்க மாகும்
ஓரிய லறம்பத் தோடு மொருங்குபன்னிரண்டு சிந்தை
ஆரிய ரறிந்து நம்பி யதன்வழி றொமுக்க மாகும்.
333

தலைமகார் சிறப்புச் செய்து தன்மைநல் வாய்மை யான
கலையினற் கரைறைக் கண்டு காதனூல் வழியைச் சென்று
மலைவில்சீர் மா தவர்க்கு வண்மையிற் றானஞ் செய்தார்
தொலைவிலாய் பிறவி நீங்கித் தொல்சுகக் கடலுளாழ்வார்.
334

தரும வீரர் தரும முறைத்திடப்
பெருமை மன்னனும் பேர்ந்து வனங்கினன்
மருவு வல்வினை மாசினுதிர்த்திடத்
தெரிசனவ்விளக் கஞ்சிறப் பானதே.
335

முனிவர் களிற்றின் வரலாறு கூறல்

காது வேன்மன்னன் களிறு கதமெழற்
கேது வென்னென யெதிவ ரன்சொலும்
தாது பூம்பொழிற் சாலிநன்னாட்டிடை
வேதியர் குழு வாய்விளங் கும்புரம்.
336

கடக மென்பதூர் காதற் பிராமணன்
விடப கன்னென்னும் பேரினன் மற்றவன்
இடைமின் றேவியுஞ் சானகி யென்பவள்
கடையில் காமங் கலந்துடன் செல்லுநாள்.
337

அமரி யென்னு மணிமுலை வேசிதன்
அமையுங் காமத் தழுங்கி விழுந்தவன்
சமைய வேள்வியுஞ் சார்ந்த வொழுக்கமும்
அமைவி லன்பவ மஞ்சினனில்லையே.
338

காமங் கள்ளுண்டு கைவிட லின்றியே
தாம நற்குழ லாடுணை யாகவும்
யாம மும்பக லும்மறி யாதவன்
ஆமர ணத்தன்பினானைய தாயினன்.
339

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;