கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 28 மார்ச், 2012

உதயண குமார காவியம்,-17 முடிவு

மன்னனின் செயல்


அந்நிலை யுணர்ந் தடங்கிய தென்றனர்
மன்னன் கேட்டுடன் வந்துநற் பாகர்க்குச்
சொன்ன யானையைத் தூயநீ ராட்டெனும்
அன்னம் பானெய்யினன்புடனூட்டெனும்.
340


கவள நாடொறு மூட்டெனுங் காவலன்
பவள மாமெனும் பண்ணவர் தம்மடி
திவளு மாமுடி சேர்த்து வணங்கியே
உவள கத்துன்னி மற்றொன்று கேட்டனன்.
341


உதயணன் முனிவரை வினவுதல்


மதக்க ளிற்றின்மேன் மன்னிய வன்பெனக்
குதவக் காரண மென்னெனக் கூறலும்
சிதைவில் காட்சிநற் சீரொழுக் கத்தவர்
மதமின் மாட்சியர் மன்னநீ கேளென்றார்.
342


முனிவர் கூற்று


உள்ள நற்றவ ருற்றுரை செய்கின்றார்
கள்ள விழ்பொழிற் கார்முகில் சூடியே
வெள்ளி யம்மலை மேல்வட சேடியில்
வள்ளலார் பொய்கை மத்திம நாட்டினுள்.
343


சுகந்தி யூர்க்கிறை சொற்புகழ் மாதவன்
அகந்தெ ளிந்த வயந்தன் மனைவியாம்
செகந் தனிப்புகழ் சீரார்கு லாங்கனை
உகந்து பெற்றன ளோர் புகழ்க் கோமுகன்.
344


காமனென்னுமக் காளைகைத் தாய்பெயர்
சோமசுந்தரி யென்னுஞ் சுரிகுழல்
நாம வேன்மகனன்மை விசையனும்
சேம மித்திர ராகச் சிறந்தனர்.
345


ஒழியாக் காதலுடன்விளை யாடியே
வழுவில் போகம் வரம்பின்றித் துய்த்தலும்
நழுவில் காட்சியனாமவேற் கோமுகன்
ஒழிய நல்லுயி ரோங்கிநீ யாயினை.
346


விசையின் றன்னுயிர் விட்டந் தணனாய்
வசையில் காம மயங்கிய மோகத்தின்
இசையினாலுயிர் நீங்கியே யிங்குவந்
தசையு ணாக்களி றாயின தாகுமே.
347


மித்திரன்முன்பு வீறுநற் காதலால்
அத்தி மேலுனக் கன்புமுன் டானதால்
வெற்றி வெண்குடை வேந்தேயிவ் வேழத்தின்
ஒத்த வாயுவு மோரெழு நாளென்றார்.
348


உதயணன் வருந்திக் கூறுதல்


திருந்து ஞானத்திற்றோர்ந்த முனியுரை
பொருந்தக் கேட்ட புரவலன் றுக்கமாய்
வருந்திச் சென்றந்த வாரணந் தன்னிடைச்
சரிந்த காதலிற் றானுரை செய்கின்றான்.
349


உதயணன் செயல்


வஞ்ச கத்தின் வரிந்துங் கயிற்றினால்
வெஞ்செம் முள்ளினை வீரிட வூன்றியும்
மிஞ்சிக் கால்விலங் கிற்சிறை செய்தனன்
குஞ்ச ரம்பொறை கொள்ளுதி யென்னவே.
350


காதல் யானையைக் கையின்மெய் தீண்டியே
போத வெங்கும் புரவலன் றைவரப்
போத கம்மிகப் பொற்பினிறைஞ்சலிற்
காத லிற்றிண் களிற்றியல் கூறெனா.
351


உதயணன் அரண்மனை புகுதல்


யானை யாளர்க் குரைத்தெழின் மன்னவன்
தேனெய் தோய்ந்த திருமொழி மாதவர்
ஆன வர்பத மன்பிற் றொழுதுபோய்ச்
சேனை சூழத் திருமனை சேர்ந்தனன்.
352


உதயணனின் வழிபாடு


சீலமும் வளங்களுஞ் செறிந்தவேழத் தன்மையை
காலையவ்வு ழையர் வந்து கண்டுரைப்ப மன்னனும்
ஆலையம் வலமதா யருகனைவ ணங்கிப்பின்
பாலடிசினெய்யருந்திப் பாரரசன் செலுநாள்.
353


உதயணனின் செயல்


சல்லகீணை கொண்டுடன் சமாதிவந்தே யெய்தலும்
நல்லவானிற் றேவனாய் நாகமுறை செய்யக்கேட்டுச்
சொல்லரிய வேந்தனுஞ் சூழ்ந்தவனி போகவும்
நல்லலவென் றுணர்ந்தனனேமியனைவா வென்றனன்.
354


நரவாகனனிடம் உதயணன் கூறுதல்


அவனும் வந்து தந்தையை யடியிணைவ ணங்கினான்
அவனியுன தாகவா ளென்ன மன்னன் செப்பினன்
தவவனிதை யாளநான் றாங்குதற்குப் போவனே
உவமமிலா ராச்சிய முற்றதெதற் கென்றனன்.
355


கோமுகனுக்கு முடிசூட்டுதல்


வத்தவன்னிறைவனாக மன்னுகோ முகனுக்கு
வெற்றிநன்ம ணிமுடியை வீறுடனே சூட்டியே
ஒத்துலக மாள்கவென் றுரைபல வுரைத்தபின்
சித்திரநேர் மாதரைச் செல்வனோக்கிக் கூறுவான்.
356


உதயணனன் மனைவிகளிடத்து கூறலும் அவர்களின் பதில் உரையும்


தேவியீர் நீர் வேண்டியதென் றிருமனை துறந்துபின்
மேவுவனற் றவமென்ன மின்னிடைய மாதரும்
போவதுபொ ருளெமக்குப் புரவலனே நின்னுடன்
தாவில்சீர் விழுத்தவழுந் தாங்குதுமென் றிட்டனர்.
357


உதயணனுடன் தேவியரும் செல்லல்


உருமண்ணு விடபகன் யூகிநல் வயந்தகன்
பொருவினா லமைச்சரும் பொற்பரசன் மாதரும்
மருவுநன் மலர்ப்பொழில் வண்மைவலங் கொண்டுமிக்
கருண்முனிவர் பாதத்தி லன்புடன் பணிந்தனர்.
358


உதயணன் முனிவரிடம் வேண்டுதல்


நாத்தழும்ப மன்னனு நயமுறு மினிமையின்
தோத்திரங்கள் கொண்டுமீத் தொடுத்தொலியின் வாழ்த்தியே
ஏத்தற முரைத்திட வினிமை வைத்துக் கேட்டனன்
ஏத்தரிய நற்றவமு மெங்களுக் களிக்கென்றான்.
359


உதயணன் முதலியோரின் தவக்கோலம்


காலமிது காட்சிதலை கண்டுணர்த்தக் கைக்கொண்டு
ஞாலநிகழ் ஞானமு நன்குமிகவே யுணர்த்திச்
சீலமாதி யாயொழுக்கஞ் சீருடனளித்துப்பின்
கோலமான குஞ்சிமுதல் வாங்கித்தவங் கொண்டனர்.
360


அனைவரின் தவநிலை


அறுவகைய காயங்களை யருண்மிக்குற் றோம்பியும்
பொறிகளை மனத்தடக்கிப் புண்ணியமா நோன்புகள்
அறிகுறி யநசன மாற்றுதற் கரிதென
மறுவறு தியானமு மதியகந் தெளிந்தவே.
361


புறத்தினும் மகத்தினும் போகத் தொடர்ப் பாடுவிட்
டறத்திடை யருளினா லாயிருரை யோம்பியும்
திறத்துடன் சமிதியுஞ் சிந்தையின்னடக்கமும்
திறத்திறத் துணர்ந்துபின் றியானமுற்றினார்களே.
362


ஒருவகை யெழின்மன மிருவகைத் துறவுடன்
மருவுகுத்தி மூன்றுமே மாற்றிநான்கு சன்னையும்
பொருவிலைம் புலம்மடக்கிப் பொருந்தியவா வச்சமூ
விருவகைச் செவிலியு மெழுவரையும் வைத்தனர்.
363


சுத்திமீக வெட்டினோடுஞ் சூழ்ந்தயோகு வொன்பதாம்
பத்துவகை யூற்றடைத்துப் பயின்றவங்கம் பத்தொன்றும்
சித்தம்பனி ரெண்டுசீர்க் கிரியைபதின் மூன்றுடன்
ஒத்தபங்க மீரேழு மொருங்குடன் பயின்றனர்.
364


உதயணன் கேவல ஞானம் எய்துதல்


உதயண முனிவனு மோங்குமாவரைதனில்
இதயமினி தாகவே யெழில்பெறநல் யோகமாய்
இதமுறு தியானத்தினிருவினை யெரித்துடன்
பதமினிது சித்தியெய்திப் பரமசுகத் திருந்தனன்.
365


தேவியரும் அமைச்சரும் நோன்பிருந்து தேவராதல்


அமைச்சரா மநகரு மானவன்ன மாதரும்
சமைத்தநோன்பு நோற்றுயர்ந்து சமாதிறன் மரணத்தின்
இமைத்தலில் லமரரா நிறைந்தசோத மாதியாய்
அமைத்தவச் சுதம்மள வானபாடியின்புற்றார்.
366


தேவியரும் அமைச்சரும் தேவலோகத்தில் இன்புற்றிருத்தல்


பொற்புடைநன் மாதரைப் புணர்ந்துமேனி தீண்டலும்
அற்புதமாய்க் காண்டலு மானவின்சொற் கேட்டலும்
கற்புடைமனத்திலெண்ணிக் காணற்கரி தாகவே
விற்பனநன் மாதவர் வேண்டுசுகந் துய்த்தனர்.
367


காண்டங்களின் செய்யுட் தொகை


உஞ்சை நற் காண்டந் தன்னி லுயர்கவி நூற்றீரெட்டு
விஞ்சவே யிலாவா ணத்தின் வீறுயர் முப்பதாகும்
எஞ்சலின் மகத காண்ட மெழிலுடை முப்பத்தஞ்சாம்
அஞ்சுடனைம்பத் தொன்றா மரியவத் தவத்திலன்றே.
368


[நூற்றீரெட்டு - நூற்றுப்பதினாறு. கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பயன் கூறும் செய்யுள், உள்ளிட்ட நான்கு செய்யுள் நீங்கலாக உஞ்சைக் காண்ட செய்யுட்தொகை]


நறுமலர் மாலை மார்பனரவாக காண்டந் தன்னில்
அறுபது மொன்று மாகு மாகிய துறவுக் காண்டம்
அறுபது மஞ்சு மாகு மன்புவைத் தோது வோர்க்குந்
திறவதிற் கேட்ப வர்க்குஞ் சிவகதி யாகுமன்றே.
369



உதயண குமார காவியம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;