நங்கையர் மனத்தில் விசயன்
வார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர் ஏர்வளர் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற் கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய் ஆர்வளர்த் தவர்கொலென் பருவ மாயினார் | 76 |
மங்கையர் மாட்சி
கண்ணிலாங் கவினொளிக் காளை மார்திறத் துண்ணிலா வெழுதரு காம வூழெரி எண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப் பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே | 77 |
காதல் தீ வளர்க்கும் காளைப் பருவம்
திருவளர் செல்வர்மேற் சென்ற சிந்தைநோய் ஒருவரி னொருவர்மிக் குடைய ராதலால் உருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர் எரிவளர்த் திடுவதோ ரிளமை யெய்தினார் | 78 |
அரசன் மனைவியருடன் அமர்ந்திருத்தல்
மற்றொர்நா ளமரிகைக் கொடிகொண் மாமணிச் சுற்றுவான் சுடரொளி தழுவிச் சூழ்மலர் முற்றிவண் டினம்விடா முடிகொள் சென்னியக் கொற்றவ னிளையவர் குழைய வைகினான் | 79 |
அரசன் உறங்குதல்
மஞ்சுடை மணிநகு மாலை மண்டபத் தஞ்சுட ரகிற்புகை யளைந்து தேனளாய்ப் பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன் செஞ்சுட ரிரிவதோர் திறத்த னாயினான் | 80 |
உடற் பாதுகாப்பாளர்கள்
மன்னவன் றுயில்விடுத் தருள மைந்தர்பொன் றுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர் பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர் அன்னவ ரடிமுதற் காவ னண்ணிணார் | 81 |
திருப்பள்ளி எழுச்சி
தங்கிய தவழழொளி தடாவி வில்லிட மங்கல வுழக்கல மருங்கு சேர்ந்தன அங்கவன் கண்கழூஉ வருளிச் செய்தனன் பங்கய முகத்தர்பல் லாண்டு கூறினார் | 82 |
அந்தணர் வாழ்த்து கூற அரசன் அவர்களை வணங்குதல்
அந்தண ராசிடை கூறி யாய்மலர்ப் பைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார் செந்துணர் நறுமலர் தெளித்துத் தேவர்மாட் டிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான் | 83 |
வாயில் காப்போர் உலகு காப்போன் வரவை எதிர்பார்த்தல்
விரையமர் கோதையர் வேணுக் கோலினர் உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய் முரசமர் முழங்கொலி மூரித் தானையன் அரசவை மண்டப மடைவ தெண்ணினார் | 84 |
அரசன் வாயிலை அடைதல்
பொன்னவிர் திருவடி போற்றி போற்றிஎன் றன்னமென் னடையவர் பரவ வாய்துகிற் கன்னியர் கவரிகா லெறியக் காவலன் முன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான் | 85 |
மெய்க்காப்பாளர் அரசனைக் காத்தல்
மஞ்சிவர் வளநகர் காக்கும் வார்கழல் நஞ்சிவர் வேனர பதியை யாயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர் கஞ்சுகி யவர்கண்மெய் காவ லோம்பினார் | 86 |
அரசன் திருவோலக்க மண்டபத்தை யடைதல்
வாசநீர் தெளித்தலர் பரப்பி வானகம் எசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய மூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புறத் தோசைநீள் மண்டப முவந்த தெய்தினான் | 87 |
வேறு - மண்டபத்திற்குள் புகுதல்
பளிங்கொளி கதுவப் போழ்ந்த பலகைகண் குலவச் சேர்த்தி விளங்கொளி விளிம்பிற் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுட் டுளொங்கொளி பவளத் திண்காற் சுடர்மணி தவழும் பூமி வளங்கவின் றனைய தாய மண்டப மலிரப் புக்கான் | 88 |
அரசன் அணையில் வீற்றிருக்கும் காட்சி
குஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடு போலும் அஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றிச் செஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசைச் சேர்ந்த செல்வன் வெஞ்சுட ருதயத் துச்சி விரிந்த வெய் யவனோ டொத்தான் | 89 |
அரசன் குறிப்பறிந்து அமர்தல்
பூமரு விரிந்த நுண்ணூற் புரோகிதன் பொறிவண் டார்க்கும் மாமல ரணிந்த கண்ணி மந்திரக் கிழவர் மன்னார் ஏமரு கடலந் தானை யிறைமகன் குறிப்பு நோக்கித் தாமரைச் செங்கண் டம்மாற் பணித்ததா னத்த ரானார் | 90 |
சிற்றரசர்கள் தங்கட்குரிய இடங்களில் அமர்தல்
முன்னவ ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும் மன்னவன் கழலைத் தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டிப் பின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார் மின்னிவர் கடகப் பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம் | 91 |
படைத் தலைவர்கள் உடனிருத்தல்
வழிமுறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான் விழுமல ரடிக்கண் மிக்க வன்பினார்; வென்றி நீரார்; எழுவளர்த் தனைய தோளா ரிளையவ ரின்ன நீரார் உழையவ ராக வைத்தா னோடைமால் களிற்றி னானே | 92 |
புலவர்கள் வருதல்
காவல னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தில் நாவல ரென்னும் வண்டு நகைமுகப் பெயரி னாய பூவலர் பொலிவு நோக்கிப் புலமயங் களிப்ப வாகிப் பாவல ரிசையிற் றோன்றப் பாடுபு பயின்ற வன்றே | 93 |
இசைப் புலவர்கள் வாழ்த்து கூறுதல்
பண்ணமை மகர நல்யாழ்ப் பனுவனூற் புலவர் பாடி மண்ணமர் வளாக மெல்லாம் மலர்ந்ததின் புகழோ டொன்றி விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக் கண்ணம ருலகம் காக்கும் கழலடி வாழ்க வென்றார் | 94 |
இதுவும் அது
மஞ்சுடை மலையின் வல்லி தொடரவான் வணங்க நின்ற அஞ்சுடர்க் கடவுள் காத்த வருங்குல மலரத் தோன்றி வெஞ்சுட ரெஃக மொன்றின் வேந்துகண் ணகற்றி நின்ற செஞ்சுடர் முடியி னாய்நின் கோலிது செல்க வென்றார் | 95 |
வாயிற் காவலனுக்கு ஒரு கட்டளை
இன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன் பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும் கன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான் | 96 |
நிமித்திகன் வரவு
ஆயிடை யலகின் மெய்ந்நூ லபவுசென் றடங்கி நின்றான் சேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான் மேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் குறுவன் கொல்லோ நீயிடை யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான் | 97 |
அரசன் நிமித்திகனை வரவேற்றல்
ஆங்கவ னரசர் கோமான் குறிப்பறிந் தருளப் பட்டீர் ஈங்கினிப் புகுமி னென்றா னிறைவனை யவனுஞ் சேர்ந்தான் வீங்கிருந் தானை யானும் வெண்மலர் பிடித்த கையால் ஓங்கிருந் தானங் காட்டி யுவந்தினி திருக்க வென்றான் | 98 |
நிமித்திகன் தன் ஆற்றலை காட்டத் தொடங்குதல்
உற்றத னொழுக்கிற் கேற்ப வுலகுப சார நீக்கிக் கொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான் முற்றிய வுலகின் மூன்று காலமூ முழுது நோக்கிக் கற்றநூற் புலமை தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான் | 99 |
அரசன் கனாக்கண்டதை நிமித்திகன் கூறுதல்
கயந்தலைக் களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது கங்குல் நயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை விசும்பகத் திழிந்து வந்தோர் வேழம்வெண் போது சேர்ந்த தயங்கொளி மாலை சூட்டித் தன்னிட மடைந்த தன்றே |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.