168 | வாயிலோ னுரைகேட்டு வடிக்கண்ணாண் முகநோக்கி கோயிலையான் புகவிலக்குங்குறையென்னை முறைதிருத்தும் பூசலிங் குடையையோபொருளிழவோ வுயிரிழவோ நீயிலையார் புதனடற்குநிமித்தமிங் கென்னென்றாள். |
169 | என்கருமம் வினவுதியேலிலிங்கியரு ளென்னோடு நன்குரைப்பார்த் தரவ்வேண்டிநாவற்கொம் பிதுநட்டே னுன்கரும நீ செய்வாய்நுழைந்தறிவு முடையையேல் மன்பெரியான் றிருந்தவையுண்மாற்றந்தா வெனச்சொன்னாள். |
170 | அப்படித்தே யெனின்வாயிலடைப்பொழிக யானைதே ரெப்படியு மியங்குகநும்மிறைமகற்கு மிசைமினென் றிப்படியா லிவையுரையாவிலைநாவ லிறுத்திட்டா டுப்போடு கனிதொண்டை துயில்கொண்ட துவர்வாயாள். |
171 | வேந்தனு மதுகேட்டே விம்முயிர்த்த வுவகையனாய்ப் பூந்தடங்க ணல்லார் புகுதுக வெனப்புகலும் போந்திருக்க வெனவிருக்கை பொருந்திய வாறவர்கட் கீந்துலகத் தியற்கையு மினிதினிற் செய்திருந்தான். |
172 | முதலவனோ டவனூலுமந்நூலின் முடிபொருளு நுதலிய பொருணிகழ்வுந்நுங்கோளு மெமக்கறியத் திதலைமா ணல்குலீர்தெருட்டுமி னெனச்சொன்னா னதலையும் பெருங்கதவமடைப்பொழித்திட் டலைவேலான். |
173 | நன்றாக வுரைத்தனைநீநரதேவ நின்னவையுள் வென்றார்க்கோர் விழுப்பொருளும்தோற்றார்க்கோர் பெரந்துயரும் ஒன்றாக வுரையாக்காலுரையேன்யா னெனச்சொன்னாள் குன்றாத மதிமுகத்துக்குண்டலமா கேசியே. |
174 | அறத்தகைய வரசனுமதுகேட்டாங் கவர்க்குரைப்பான் சிறப்பயர்வ னன்றாகவென்றார்கட் கின்றேயான் புறப்படுப்பன் றோற்றாரைப்பொல்லாங்கு செய்தென்றாற் கிறப்பவும் பெருதுவந்தாரிலங்கிழையா ரிருவருமே. |
175 | வேனிரைத்த விரிதானைவேத்தவையார் வியப்பெய்தக் கோனுரைத்த வுரைகேட்டே குண்டலமா கேசியுந் தானுரைத்தாள் தான்வேண்டுந்தலைவனூற் பொருணிகழ்ச்சி தேனிரைத்த கருங்குழலா டானும்பின றெருட்டினாள். |
176 | ஆதிதான் பெரியனாயறக்கெடு மளவெல்லா மூதியமே யுணர்ந்தவனுறுதரும மேயுரைத்தான் யாதனையுந் தான்வேண்டானயலார்க்கே துன்புற்றான் போதியா னெம்மிறைவன்பொருந்தினா ருயக்கொள்வான். |
177 | முந்துரைத்தான் முந்நூலு மந்நூலின் முடிபொருடா மைந்துரைப்பி லுருவுழப்பறிவோடு குறிசெய்கை சிந்தனைகட் செலவோடுவரவுமே நிலையில்லை தந்துரைப்பி னெரிநுதிபோற்றாங்கேடு நிகழ்வென்றாள். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.