நல்லியக்கோடன்
சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் நல்லியக்கோடன். இவன் ஒய்மா நாட்டை ஆண்ட சிற்றரசன். ஒய்மா நாடு என்பது இப்பொழுதைய திண்டிவனத்தை ஒட்டிய பகுதி. இதன் தலைநகர் கிடங்கில். இதனைப் பெருமாவிலங்கை என்றும் கூறுவர். இவன் ஆட்சிக்குட்பட்ட ஊர்களாக மாவிலங்கை, எயில்பட்டினம், வேலூர், மூர் ஆகியவை இருந்தன.
மானிட மாண்புகள்
சமூகம் வெறுக்கின்ற எந்தக் குணங்களும் எந்த ஒரு மனிதரிடமும் இருத்தலாகாது. பிறருக்கு எவ்வகையிலும் சிறிய அளவில் கூட இடையூறு விளைவிக்காதவாறு ஒவ்வொரு மனிதர்களின் செயல்களும் இருத்தல் வேண்டும். எனவே சமூகம் மதிக்கின்ற எந்த ஒரு நல்ல குணங்களையும் மனித மாண்புகள் என்று கூறலாம்.
மானிட மாண்புகள்
சமூகம் வெறுக்கின்ற எந்தக் குணங்களும் எந்த ஒரு மனிதரிடமும் இருத்தலாகாது. பிறருக்கு எவ்வகையிலும் சிறிய அளவில் கூட இடையூறு விளைவிக்காதவாறு ஒவ்வொரு மனிதர்களின் செயல்களும் இருத்தல் வேண்டும். எனவே சமூகம் மதிக்கின்ற எந்த ஒரு நல்ல குணங்களையும் மனித மாண்புகள் என்று கூறலாம்.
அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, ஈகை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை போன்ற அடுக்கடுக்காக வள்ளுவர் கூறுவதெல்லாம் மானிட மாண்புகளே அன்றி வேறில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.