கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 13 நவம்பர், 2011

சிறுபாணாற்றுப்படை-15

இங்ஙனம் பாணர்களின் மானமும் உயிரும் காக்கும் வகையில் மனம் நெகிழ்ந்து நல்லியக்கோடன் செயல்படுவது அவனிடம் மானிட மாண்பு மிக்கிருப்பதையே காட்டுகிறது.


கடையெழு வள்ளல்கள் வழி அறியலாகும் மானிட மாண்புகள்:

கடையெழு வள்ளல்களின் வள்ளல் தன்மை அவர்களின் இரக்க உணர்வுக்கும் வள்ளல் தன்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.


பேகன்
காட்டில் மயில் அகவியதைக் கேட்ட இவன் குளிரால்தான் இது அகவியது என்று நினைத்து அதன் மீது இரக்கம் கொண்டு தனது விலை உயர்ந்த கலிங்கப் பட்டாடையை அதற்குப் போர்த்தினான்.
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய....... ........

பெருங்கடல் நாடன் பேகன் (85-87)

 பாரி: 
முல்லைக் கொடி தான் பற்றிப் படர்வதற்கு ஏற்ற கொழு கொம்பின்றி தவித்தது. இதனைக் கண்ணுற்ற பாரி தான் ஏறிச் சென்ற தேரை அவ்விடத்தில் நிறுத்தி அlதில் முல்லைக் கொடியைப் படர விட்டான்.
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய.... ...... ....-.

பறம்பிற் கோமான் பாரி (89-91)
காரி
உலகமே வியக்கும் வகையில் போரில் புகழ்மிக்க தன் குதிரையையும், பெரும் பொருளையும் இரவலர்க்குக் கொடுத்தான்
.ஈர நன்மொழி இரவலர்க்கீந்த.... .... .....

கழல்தொடித் தடக்கைக்காரி (93-95)

ஆய்
இனிய மொழிகளைப் பிறா¢டத்துப் பேசி மகிழ்பவன். பெறற்கா¢ய மணிகளையும்
டைகளையும் பெற்றிருந்தான். சிவன் மீது கொண்ட பற்றினால் அவற்றை இவன் சிவபெருமானுக்கு வழங்கினான். இதனை
........ ........... நிழல் திகழ்
நீலம் நாகம் நல்கிய கலிங்கம்
ல் அமர்செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாகிய சாந்து புலர் திணிதோள்
ஆர்வ ன்மொழி ஆயும் (95-99)

 என்று சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது.

அதிகன்: 
தனக்குக் கிடைத்த அ¡¢ய வகை நெல்லிக்னியைத் தான் உண்ணாது அதனை வைக்குக் கொடுத்து அழியாப் புகழ் பெற்றவன்.
அமிழ்துவிளை தீங்கனி வைக்கு ஈந்த......... . ....... ........ ...........

அரவக் கடல்தானை அதிகனும் (101-103)
 நள்ளி: 
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதலும், உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் பயன் தராது என்ற கொள்கை உடைய வள்ளல். தன்னிடம் வந்தவர்கள் வறுமையில் வாடாதவாறும், வேறொருவரிடம் சென்று இரவாதவாறும் நிரம்பக் கொடுக்கும் இயல்புடையவன். இதனால் இவன், 
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை. ....... ........... . ......... .............
நளிமலை நாடன் நள்ளி (105-107)

 என்று பாராட்டப் பெற்றான்.

ஓரி: 
புன்னை மரங்களையும், குன்றுகளையும் உடைய நாடுகளைக் கூத்தருக்கு வாரி வழங்கியவன். நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த.. ..... ......... .......... ..............
ஓரிக் குதிரை ஓரி (107-111)


இங்ஙனம் கடையெழு வள்ளல்களின் கொடையின் மூலம் அவர்களது சிறந்த மாண்புகள் வெளிப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;