அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர் புரிவளை முன்கைப் புனைஇழை நல்லார் விரகிலர் என்று விடுத்தனர் முன்னே. |
27 |
பீடுஇல் செய்திக ளால்கள வில்பிறர் வீடில் பல்பொருள் கொண்ட பயன் எனக் கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்து ஓடல் இன்றி உலையக் குறைக்குமே. |
28 |
பொய்யின் நீங்குமின்; பொய்யின்மை பூண்டுகொண்டு ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்; வைகல் வேதனை வந்துஉறல் ஒன்றுஇன்றிக் கௌவை இல்உலகு எய்துதல் கண்டதே. |
29 |
கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும் நல்லில் செல்லல்க ளால்நலிவு உண்மையும் பொய்யில் பொய்யோடு கூடுதற்கு ஆகுதல் ஐயம் இல்லை அதுகடிந்து ஓம்புமின். |
30 |
உலகுஉடன் விளங்கஉயர் சீர்த்திநிலை கொள்ளின் நிலையில்கதி நான்கின் இடை நின்றுதடு மாறும் அலகில்துயர் அஞ்சின்உயிர் அஞ்சவரும் வஞ்சக் கொலைஒழிமின் என்றுநனி கூறினர் அறிந்தார். |
31 |
வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயம் கள்வர்என்று இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும் உள்ளில் ஒருபொருளை ஒட்டாது ஒழிந்தவர் எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வம் இகப்பவோ. |
32 |
ஒழிந்த பிறஅறன் உண்டென்பார் உட்க அழிந்து பிறர் அவாம் வம்பப் பொருளை இழந்து சிறிதானும் எய்தாது ஒழிந்தார் அழிந்து பெருந்துயர்நோய்க்கு அல்லாப் பவரே. |
33 |
இன்மை இளிவாம் உடைமை உயிர்க்கு அச்சம் மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப் புன்மை உறுக்கும் புரைஇல் அரும்பொருளைத் துன்னாது ஒழிந்தார் துறவோ விழுமிதே. |
34 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.