கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 26 டிசம்பர், 2011

யசோதர காவியம்-4


தமிழில் ‘யசோதர காவியம்’ படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. வடமொழியில் நாக குமார காவியம் படைத்த மல்லிசேனரே தமிழிலும் அக்காவியத்தைப் படைத்தது போல, வடமொழியில் ‘யசோதர சரிதம்’ படைத்த வாதிராஜ சூரியே தமிழிலும் இக்காவியம் படைத்திருக்க வேண்டும் என்று வேங்கட ராமையங்கார் கருதுகிறார்.

புட்பதந்தன் சொன்ன பொருள்சேர் கதைதன்னைத் 
திட்பமாய்ச் செந்தமிழில் செப்பினான் - நட்புடையார் 
நண்ணார் இவர்என்ன நாடாக் கொடைக்கையர் 
வெண்ணாவல் ஊருடைய வேள்

(நட்புடையார் நண்ணார்.....கொடைக்கையர் = வேண்டியவர்,  வேண்டாதவர் என்று பார்க்காத வள்ளல்)

என்ற ஏட்டுப் பிரதியில் காணப்படும் வெண்பாவால் இந்நூலாசிரியர் வெண்ணாவல் என்ற ஊரில் வாழ்ந்த வள்ளல் வேள் என்பது தெரிய வருகிறது. ‘வேள்’ என்பது கூட இவரது குடிப்பெயராகவே அறியப்படுகிறது. இவர் புட்பதந்தரின் ‘யசோதர சரிதம்’ என்ற நூலைத் தழுவியே இக் காவியம் படைத்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இங்கு இடம் பெறும் வெண்ணாவலூர் திருவானைக்காவாக இருக்கவேண்டும் என்பர். திருவானைக்கா திருச்சிக்கு அருகில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;