தமிழில் ‘யசோதர காவியம்’ படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. வடமொழியில் நாக குமார காவியம் படைத்த மல்லிசேனரே தமிழிலும் அக்காவியத்தைப் படைத்தது போல, வடமொழியில் ‘யசோதர சரிதம்’ படைத்த வாதிராஜ சூரியே தமிழிலும் இக்காவியம் படைத்திருக்க வேண்டும் என்று வேங்கட ராமையங்கார் கருதுகிறார்.
புட்பதந்தன் சொன்ன பொருள்சேர் கதைதன்னைத்
திட்பமாய்ச் செந்தமிழில் செப்பினான் - நட்புடையார்
நண்ணார் இவர்என்ன நாடாக் கொடைக்கையர்
வெண்ணாவல் ஊருடைய வேள்
(நட்புடையார் நண்ணார்.....கொடைக்கையர் = வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காத வள்ளல்)
என்ற ஏட்டுப் பிரதியில் காணப்படும் வெண்பாவால் இந்நூலாசிரியர் வெண்ணாவல் என்ற ஊரில் வாழ்ந்த வள்ளல் வேள் என்பது தெரிய வருகிறது. ‘வேள்’ என்பது கூட இவரது குடிப்பெயராகவே அறியப்படுகிறது. இவர் புட்பதந்தரின் ‘யசோதர சரிதம்’ என்ற நூலைத் தழுவியே இக் காவியம் படைத்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இங்கு இடம் பெறும் வெண்ணாவலூர் திருவானைக்காவாக இருக்கவேண்டும் என்பர். திருவானைக்கா திருச்சிக்கு அருகில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.