உதயணன் எதிரி யானை, குதிரைப் படை அழித்தல்
திரளுடைக்கரி சேர்ந்து வளைத்தலும் வரைகள் வீழ்வென வாரணம் வீழவும் நிரை மணித்தேர் நிலத்திற் புரளவும் புரவிகள் பொங்கிப் பூமியில் வீழவும். | 56 |
வெஞ்சினம் மனன் வேறணி நூறலும் குஞ்சரத்தினற் கோட்டின் வாளொடியவத் தஞ்ச மின்றிய தாருடை வேந்தனை வெஞ்சொல் மாந்தர் வெகுண்டு உடன்பற்றினார். | 57 |
நங்கை மார்சூழ னாண்மலர் சூட்டுங்கை திங்கள் போலத் திலத மெழுதுங்கை பொங்கு கொங்கையிற் குங்குமம் பூசுங்கை பங்க யத்தடிப் பாடகம் பூட்டுங்கை. | 58 |
கீத வீணை செங்கெந்தம் அனையுங்கை ஈதன் மேவியிர வலர்க்கு ஆற்றுங்கை ஏதமில் குணத்து என்முடி மன்னன்கை போத வெண்டு கிலாற்புறத் தார்த்தனர். | 59 |
உதயணன் வயந்தகனுக்கு ஓலையனுப்புதல்
சிலந்தி நூலிற் செறித்தநற் சிங்கம்போல் அலங்கல் வேலினான் அன்புடை யூகிக்கே இலங்க ஓலை எழுதி வயந்தகன் நலங்கொள் கையின வின்று கொடுத்தனன். | 60 |
பிரச்சோதனன் மகள் வாசவதத்தையின் கனவு
காசிறேர் மிசைக் காவலுடன் செலப் பேசரும் பெருமைப் பிரச் சோதனன் ஆசையின் மகள் ஆடகப்பா வைபோன்ம் வாசவ தத்தை வண்மைக் கனவிடை. | 61 |
பொங்கி ளங்கதிர் போந்த தமளியில் கொங்கையைத் தழீஇக் கொண்டுடன் செல நங்கை கண்டு நற்றாதைக்கு உரைந்தனள் அங்கந் நூலின் அறிந்தவர்க் கேட்டனன். | 62 |
இவன்முலைக் கியைந்த நல்லெழின் மணம்மகன் வந்தே துவளிடை இளமுலை தோய்ந்து கொண்டுபோமென அவள் கனவுரைப்பக் கேட்ட அண்ணலும் மகிழ்ந்தபின் திவளுமாலைத் தேர்மிசைச் செம்மல் வந்தடைந்தனன். | 63 |
உதயணன் சிறைப் புக, வயந்தகன் யூகியைக் காணல்
மன்னனை மிகவு நொந்து மாநகரிரங்கவும் துன்னிவெஞ்சிறை மனையிற் றொல்வினை துரப்பவும் இன்ன நற்படியிருப்பவியல் வயந்தகனும் தான் சென்றுயூகி தன்னிடைத் திருமுகத்தைக் காட்டினான். | 64 |
ஓலையைக் கண்டு யூகி துன்புறுதல்
அண்ணன்கோயில் எங்கணும் அரற்றினும் புலம்பினும் கண்ணினீரருவிகள் கால் அலைத் தொழுகவும் அண்ணல் ஓலைவந்த செய்திமான யூகிகேட்டுடன் புண்ணில் வேலெறிந்தெனப் பொற்பழிந்து வீழ்ந்தனன். | 65 |
யூகியின் கோட்பாடு
தேறினன் எழுந்திருந்து தீயவர்கள் யானையை மாறுதரக்காட்டி எம் மன்னனைப் பிடித்தனர் வீறுதர அந்நகரை வெங்கயத் தழித்துப் பின் கூறுமன் மகளுடன் கொற்றவனை மீட்குவம். | 66 |
மீள்குலம் யாமென்றெணி வெகுண்டு போர்க்களத்தினில் வாண்முனை கடந்தவர்க்கு வஞ்சனை செய்வோமென நீள்விழிநன் மாதரோடு நின்ற சுற்றத்தோர்களைக் கோள்களைந்து புட்பகத்திற் கொண்டுவந்து வைத்தனன். | 67 |
உருமண்ணு வாவினுடன் இடபகன் சயந்தியும் திருநிறைந்த புட்பகமும் சேர்ந்து இனிது இருக்கவெண் பெருமகன்கணிகை மைந்தர் பிங்கலக் கடகரை அரசுநாட்டி ஆள்கவென்றே அன்புடன் கொடுத்தனன். | 68 |
யூகியின் சூழ்ச்சி
மன்னவற்கு இரங்கி யூகிமரித்தனன் என்வார்த்தையைப் பன்னியெங்கணும் முரை பரப்பி வையகந்தனில் அன்னதன தொப்புமை அமைந்ததோர் சவந்தனை உன்னியூகி கான்விறகில் ஒள்ளெரிப் படுத்தினன். | 69 |
யூகி அவந்தி நாடு ஏக பகை மன்னன் நாட்டினை கைப்பற்றுதல்
தன்னகர் புலம்பவெங்கும் தன்னையுங் கரத்தலின் உன்னிவந்து மாற்றரசர் ஓங்குநாடு பற்றினர் என்றறிந்து யூகியும் இனிச்சிறையின் மன்னனைச் சென்று அவனைக்காண்டு மென்றுதேச முன்னிச் சென்றனன். | 70 |
துன்னருநற் கானமோடு தொன்மலையிற் சார்தலும் செந்நெல்கள் விளைவயற் செழும்புனனதிகளும் மன்னுநாடுந் தான்கடந்து மாகொடி நிறைந்திலங்கு நன்னகருஞ்சேனையின்நன்கு அமைச்சன் சென்றனன். | 71 |
உஞ்சையில் யூகியின் செயல்கள்
ஒலிகடலன்ன வோசையுஞ் சேனை தன் புலிமுக வாயிற் பொற்புடைத் திலங்கும் மலிகுடிப் பாக்க மதின் மறைந்திருக்க வலியதன் சேனை வைத்தனன் அன்றே. | 72 |
யூகி மாறுவேடத்தில் நகர் வீதியில் வருதல்
இன்னவை கேட்கின் இன்னவை தருக என மன்னவன் அறியும் அருளுரை பயிற்றி மன்னிய வேடம் வகுத்துடன் கொண்டு நன்னகர் வீதிநடுவினில் வந்தான். | 73 |
இருள்படு குஞ்சி யியல்படத் தூற்றி மருள் செயமாலை வகுத்துடன் சுற்றி உருணிறச் சுண்ணம் உடலினிற் பூசிப் பொருணலச் சுட்டி பொருந்துறச் சேர்த்தி. | 74 |
செம்பொற் பட்டம் சேர்த்தினன் நுதலில் அம்பொற்சாந்த மனிந்த நன் மார்பன் செம்பொற் கச்சைச் சேர்த்தினன் அரையில் அம்படக் கீறி அணிந்த உடையான். | 75 |
கோதை யுத்தரியங் கொண்ட கோலத்தன் காதிற் குழையினன் காலிற் சதங்கையன் ஊதுங் குழலினன் உனுலரிய உடுக்கையன் போதச் சிரசிற் பொருநீர்க் கலசன். | 76 |
கொடியணி மூதூர்க் கோல நல்வீதி நடுவட் டோ ன்றி நாடக மாடிப் படிமிசைக் கரணம் பாங்கிற் றாண்டி இடியென முழக்கி இனிதினின் வந்தான். | 77 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.