பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது.
|
2
|
மண் திணிந்த நிலனும்,
|
|
நிலன் ஏந்திய விசும்பும்,
|
|
விசும்பு தைவரு வளியும்,
|
|
வளித் தலைஇய தீயும்,
|
|
5
|
தீ முரணிய நீரும், என்றாங்கு
|
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
|
|
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
|
|
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
|
|
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
|
|
10
|
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும்,
|
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந!
|
|
வான வரம்பனை! நீயோ, பெரும!
|
|
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
|
|
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
|
|
15
|
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
|
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!
|
|
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
|
|
நாஅல் வேத நெறி திரியினும்,
|
|
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
|
|
20
|
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து,
|
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,
|
|
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
|
|
முத் தீ விளக்கின், துஞ்சும்
|
|
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
| |
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்பாடியது.
|
3
|
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை
|
|
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
|
|
ஏம முரசம் இழுமென முழங்க,
|
|
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்,
|
|
5
|
தவிரா ஈகை, கவுரியர் மருக!
|
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ!
|
|
பொன் ஓடைப் புகர் அணி நுதல்,
|
|
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து,
|
|
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ,
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.