'அரையனார்' என்னும் சொல்லால் இவரை அரச
குடியினர் என்று கூறலாம். முன்றுறை என்பது
கடல் மற்றும் ஆற்றின் கரைகளில், மக்கள்
நீராடவும் மற்றும் படகு, வள்ளம் போன்றவற்றில்
சென்று வரவும் வசதியாக அமைந்த துறைகளையே
'முன்றுறை' என்பார்கள். கொற்கை முன்றுறை,
கழார் முன்றுறை, காவிரி முன்றுறை, வையைக்
கரையின் திருமருத முன்றுறை என்று பல
முன்றுறைகளைப் பற்றி இலக்கியங்கள் குறிப்பிடு
கின்றன. இவற்றுள் ஒன்றைச் சேர்ந்த பகுதியில்
பிறந்தவர் இவராகலாம்.
இந்நூலின் அமைப்பிலே பயின்று வரும் சொற்க
ளையும் கருத்துக்களையும், பழமொழிகளையும்
கருத்திற் கொண்டால், இவரைத் தென்பாண்டி
நாட்டின் சீர்மிகு பழம் புலவருள் ஒருவர் எனலாம்.
சமண சமயக்கோட்பாடுகளில் அழுத்தமான பற்றி
னர் என்றும் அறியலாம்.
முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற
உண்மையை அமைத்தும், செய்யுளின் இறுதியில்
அதற்கேற்றதும் அவ்வுண்மையை வலியுறுத்துவது
மான பழமொழியை அமைத்தும், இந்நூற் செய்யுட்
களை இவர் அமைத்துள்ளார். ஒரு சில செய்யுட்
களில் மட்டுமே இரண்டு பழமொழிகளைச் சேர்த்து
ள்ளார்.
'நானூறு' என்னும் தொகையமைப்பு புறநானூறு,
அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை
நானூறு என்னும் தொகை நூல்களுள் நிலவும்,
நானூறு செய்யுட்கள் என்னும் தொகுப்பு மரபைத்
தழுவியதாகும்
குடியினர் என்று கூறலாம். முன்றுறை என்பது
கடல் மற்றும் ஆற்றின் கரைகளில், மக்கள்
நீராடவும் மற்றும் படகு, வள்ளம் போன்றவற்றில்
சென்று வரவும் வசதியாக அமைந்த துறைகளையே
'முன்றுறை' என்பார்கள். கொற்கை முன்றுறை,
கழார் முன்றுறை, காவிரி முன்றுறை, வையைக்
கரையின் திருமருத முன்றுறை என்று பல
முன்றுறைகளைப் பற்றி இலக்கியங்கள் குறிப்பிடு
கின்றன. இவற்றுள் ஒன்றைச் சேர்ந்த பகுதியில்
பிறந்தவர் இவராகலாம்.
இந்நூலின் அமைப்பிலே பயின்று வரும் சொற்க
ளையும் கருத்துக்களையும், பழமொழிகளையும்
கருத்திற் கொண்டால், இவரைத் தென்பாண்டி
நாட்டின் சீர்மிகு பழம் புலவருள் ஒருவர் எனலாம்.
சமண சமயக்கோட்பாடுகளில் அழுத்தமான பற்றி
னர் என்றும் அறியலாம்.
முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற
உண்மையை அமைத்தும், செய்யுளின் இறுதியில்
அதற்கேற்றதும் அவ்வுண்மையை வலியுறுத்துவது
மான பழமொழியை அமைத்தும், இந்நூற் செய்யுட்
களை இவர் அமைத்துள்ளார். ஒரு சில செய்யுட்
களில் மட்டுமே இரண்டு பழமொழிகளைச் சேர்த்து
ள்ளார்.
'நானூறு' என்னும் தொகையமைப்பு புறநானூறு,
அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை
நானூறு என்னும் தொகை நூல்களுள் நிலவும்,
நானூறு செய்யுட்கள் என்னும் தொகுப்பு மரபைத்
தழுவியதாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.