அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல்
நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
விளங்கு பெருந் திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன, நாடு இழந்தனரும், 345
கொழும் பல் பதிய குடி இழந்தனரும்,
தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த,
அண்ணல் யானை, அடு போர் வேந்தர்
இன் இசை முரசம் இடைப் புலத்து ஒழிய,
பல் மாறு ஓட்டி, பெயர் புறம் பெற்று, 350
மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்,
விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை,
தொல் வலி நிலைஇய, அணங்குடை நெடு நிலை,
நெய் படக் கரிந்த திண் போர்க் கதவின்,
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு, 355
வையை அன்ன வழக்குடை வாயில்,
வகை பெற எழுந்து வானம் மூழ்கி,
சில்காற்று இசைக்கும் பல் புழை நல் இல்,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
பேரொலியும் பல் வகைக் கொடிகளும்
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப, 360
மா கால் எடுத்த முந்நீர் போல
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல,
கயம் குடைந்தன்ன இயம் தொட்டு, இமிழ் இசை
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை,
ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமித்து, 365
சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல் கொடி,
வேறு பல் பெயர் ஆர் எயில் கொளக் கொள,
நாள்தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி,
நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு
புலவுப் படக் கொன்று, மிடை தோல் ஓட்டி, 370
புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி,
கள்ளின் களி நவில் கொடியொடு, நன் பல
பல்வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇ,
பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க
நால் வகைப் படைகளின் இயக்கம்
பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின், 375
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ, இடை புடையூ,
கூம்பு முதல் முருங்க எற்றி, காய்ந்து உடன்
கடுங் காற்று எடுப்ப, கல் பொருது உரைஇ,
நெடுஞ் சுழிப் பட்ட நாவாய் போல,
இரு தலைப் பணிலம் ஆர்ப்ப, சினம் சிறந்து, 380
கோலோர்க் கொன்று, மேலோர் வீசி,
மென் பிணி வன் தொடர் பேணாது, காழ் சாய்த்து,
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்
அம் கண் மால் விசும்பு புதைய, வளி போழ்ந்து,
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும் 385
செங் கால் அன்னத்துச் சேவல் அன்ன,
குரூஉ மயிர்ப் புரவி உராலின், பரி நிமிர்ந்து,
கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்,
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய, 390
கொடி படு சுவல விடு மயிர்ப் புரவியும்
வேழத்து அன்ன வெரு வரு செலவின்,
கள் ஆர் களமர் இருஞ் செரு மயக்கமும்
அரியவும் பெரியவும், வருவன பெயர்தலின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.