செழியனை வாழ்த்தி, அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தத் தொடங்குதல்
உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்,
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழுங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும், 200
பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே
தென் புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழு நிதி பெறினும்,
பழி நமக்கு எழுக என்னாய், விழு நிதி
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே 205
அன்னாய்! நின்னொடு, முன்னிலை, எவனோ?
கொன் ஒன்று கிளக்குவல், அடு போர் அண்ணல்!
கேட்டிசின் வாழி! கெடுக நின் அவலம்!
கெடாது நிலைஇயர், இன் சேண் விளங்கு நல் இசை!
உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல்
தவாப் பெருக்கத்து அறா யாணர், 210
அழித்து ஆனாக் கொழுந் திற்றி
இழித்து, ஆனாப் பல சொன்றி,
உண்டு, ஆனாக் கூர் நறவில்
தின்று, ஆனா இன வைகல்
நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கைப் 215
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர்
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் வறுங் கைக் குறுந் தொடி செறிப்ப
பாணர் உவப்பக் களிறு பல தரீஇ,
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ, 220
மறம் கலங்கத் தலைச் சென்று,
வாள் உழந்து, அதன் தாள் வாழ்த்தி,
நாள் ஈண்டிய நல் அகவர்க்குத்
தேரோடு மா சிதறி,
சூடுற்ற சுடர்ப் பூவின், 225
பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்,
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக,
கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு,
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப,
பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார், 230
பருந்து புறக்கல்லாப் பார்வல் பாசறைப்
படு கண் முரசம் காலை இயம்ப,
வெடி படக் கடந்து, வேண்டு புலத்து இறுத்த,
பணை கெழு பெருந் திறல், பல் வேல் மன்னர்,
கரை பொருது இரங்கும், கனை இரு முந்நீர்த் 235
திரை இடு மணலினும் பலரே, உரைசெல
மலர் தலை உலகம் ஆண்டு, கழிந்தோரே!
மருத நில வளப்பம்
வலைஞர் இயல்பு
அதனால், குண கடல் கொண்டு குட கடல் முற்றி,
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது,
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி, 240
கவலை அம் குழம்பின் அருவி ஒலிப்ப,
கழை வளர் சாரல், களிற்றினம் நடுங்க,
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து,
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின், தாங்காது,
குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல், உந்தி 245
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.