தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவெனக் கூறலாம். இது குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூலாகும். பழையனூர் நீலியே குண்டலகேசியாகப் பிறந்து சமண சமயத்தினும் பௌத்த சமயமே மேலோங்கியது என உணர்த்துவது குண்டலகேசிக் காப்பியம். அதே பழையனூர் நீலியே நீலகேசியாகப் பிறந்து குண்டலகேசியை வாதில் வென்று சமணமே உயர்ந்த சமயம் என நிறுவுகிறது நீலகேசிக் காவியம். குண்டலகேசி, நீலகேசி, அஞ்சனகேசி, காலகேசி போன்ற நூல்கள் தருக்க நூல்களாகவே அமைந்துள்ளன. தருக்கவியல் சிந்தனையை மணிமேகலைக் காப்பியம் பின்னைய காதைகளில் பேசினாலும், அதனை முழுமையாகப் பேசுவது நீலகேசி மட்டுமே. பின்னர் இத்தருக்கச் சிந்தனை சிவஞான சித்தியார், சிவஞான போதம் முதலான சைவ சித்தாந்த நூல்களில் சிறப்பாகப் பேசப்படுகிறது. என்றாலும் இத்தகைய சித்தாந்த நூல்களுக்கு நீலகேசியே மூலாதாரம் என்பது தெளிவு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.