கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

மதுரைக்காஞ்சி-4

பொருநர்க்கு யானை முதலிய பரிசுகளைப் பாண்டியன் கொடுத்தல்

ஒரு சார், விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவுத் தோள் முரண் பொருநர்க்கு,
உரு கெழு பெருஞ் சிறப்பின் 100

இரு பெயர்ப் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்,
பொலந் தாமரைப் பூச் சூட்டியும்,
நலம் சான்ற கலம் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே! 105






முதுவெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு

கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்,
வரும் வைகல் மீன் பிறழினும்,
வெள்ளம் மாறாது விளையுள் பெருக,
நெல்லின் ஓதை, அரிநர் கம்பலை, 110

புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே, என்றும்
சலம் புகன்று சுறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து,
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நனித் தூவல், 115

நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை,
இருங் கழிச் செறுவின் வெள் உப்புப் பகர்நரொடு,
ஒலி ஓவாக் கலி யாணர்
முதுவெள்ளிலை




முதுவெள்ளிலையார் ஏவல் கேட்ப, தலையாலங் கானத்தில் பகைவர்களை வென்றமை

மீக்கூறும்,
வியல் மேவல் விழுச் செல்வத்து, 120

இரு வகையான், இசை சான்ற,
சிறுகுடிப் பெருந் தொழுவர்,
குடி கெழீஇய நால் நிலவரொடு,
தொன்று மொழிந்து, தொழில் கேட்ப
கால் என்னக் கடிது உராஅய், 125

நாடு கெட எரி பரப்பி,
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,
அரசு பட அமர் உழக்கி,
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறல் உயர் புகழ் வேந்தே! 130



கொற்கைக்குத் தலைவன்

நட்டவர் குடி உயர்க்குவை
செற்றவர் அரசு பெயர்க்குவை
பேர் உலகத்து மேஎந் தோன்றிச்
சீருடைய விழுச் சிறப்பின்,
விளைந்து முதிர்ந்த விழு முத்தின், 135

இலங்கு வளை, இருஞ் சேரி,
கள் கொண்டிக் குடிப் பாக்கத்து,
நல் கொற்கையோர் நசைப் பொருந!



செழியன் பரதவரை வென்றமை

செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று,
அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின், 140

கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,
புலவு வில், பொலி கூவை,
ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
தென் பரதவர் போர் ஏறே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;