10
|
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின்,
|
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து,
|
|
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக்
|
|
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி!
|
|
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்;
|
|
15
|
பொலங் கழற் கால், புலர் சாந்தின்
|
விலங்கு அகன்ற வியல் மார்ப!
|
|
ஊர் இல்ல, உயவு அரிய,
|
|
நீர் இல்ல, நீள் இடைய,
|
|
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின்,
|
|
20
|
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர்
|
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை,
|
|
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும்
|
|
உன்ன மரத்த துன் அருங் கவலை,
|
|
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
|
|
25
|
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
|
இன்மை தீர்த்தல் வன்மையானே.
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் கருங் கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார்பாடியது.
|
4
|
வாள், வலம் தர, மறுப் பட்டன
|
|
செவ் வானத்து வனப்புப் போன்றன;
|
|
தாள், களம் கொள, கழல் பறைந்தன
|
|
கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன;
|
|
5
|
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ,
|
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
|
|
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட,
|
|
கறுழ் பொருத செவ் வாயான்,
|
|
எருத்து வவ்விய புலி போன்றன;
|
|
10
|
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய்,
|
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
|
|
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
|
|
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
|
|
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
|
|
15
|
மாக் கடல் நிவந்து எழுதரும்
|
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ
|
|
அனையை ஆகன்மாறே,
|
|
தாய் இல் தூவாக் குழவி போல,
|
|
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
| |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.